மதுரையில் கோர விபத்து: காரில் இருந்த 5 பேரும் பலி! கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மேலூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய போது மதுரை கொட்டாம்பட்டி அருகே அய்யாபட்டி பகுதியில் 4 வழிச்சாலையில் பக்கவாட்டு தடுப்புச் சுவரில் கார் மோதி அதில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர். 3 பெண்கள், 2 ஆண்கள் என 5 பேரும் உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அய்யப்பட்டி விளக்கு பகுதியையொட்டிய நான்கு வழிச்சாலையில் இன்று மாலை நடந்த பெரும் கார் விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள், மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் அவரது நான்கு உறவினர்கள் ஆவர்.

Madurai Accident 5 Members of Same Family Killed in Tragic Road Accident

இவர்கள் அனைவரும் திருச்சியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்திவிட்டு, மதுரைக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், திடீரென சாலையின் பக்கவாட்டுச் சுவரில் பலமாக மோதியது.

இந்த கோர விபத்தில் காரில் பயணித்த ரமேஷ் உள்ளிட்ட இரண்டு ஆண்களும், மூன்று பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, மதுரை மேலூர் அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+