மதுரை அழகர்கோவில் மலைப்பாதை சாலை திடீர் மூடல்! பழமுதிர்சோலைக்கு எப்படி செல்வது? தவிக்கும் பக்தர்கள்
மதுரை: மதுரையில் அழகர்கோவில் மலைப்பாதை திடீரென இன்று ஒரு நாள் மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர் மலை திருமாலிருஞ்சோலை என அழைக்கப்படுகிறது. இது 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாகும். இந்த அழகர்மலை அடிவாரத்திலிருந்து 2 கிலோ மீட்டர் உயரத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் ஆறாவது வீடான பழமுதிர்சோலை அமைந்துள்ளது.

அது போல் இந்த பழமுதிர் சோலையிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் ராக்காயி அம்மன் நூபுர கங்கை தீர்த்தமும் அமைந்துள்ளது. இந்த நிலையில் மதுரை அழகர்கோவில் மலைப்பாதை இன்று ஒரு நாள் மட்டும் திடீரென மூடப்பட்டுள்ளது.
இதனால் பக்தர்கள் அவதிப்படுகிறார்கள். பாலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இன்று ஒரு நாள் மட்டும் மலைப் பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்ற திடீர் அறிவிப்பால் பழமுதிர்சோலைக்கு வரும் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் மலை அடிவாரத்தில் காத்திருக்கிறார்கள்.
முன்கூட்டியே இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தால் நாங்கள் வந்திருக்க மாட்டோமே என அங்கிருக்கும் காவல் துறையிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். வாகனங்கள் செல்லத்தான் தடையே தவிர நடந்து செல்ல எந்த தடையும் இல்லை. ஆயினும் மலைக்கு நடந்து சென்றால் செல்லும் நேரத்தில் கோயில் திறந்திருக்குமா என்ற அச்சத்திலும் பக்தர்கள் உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications