நீதித்துறை மனிதனின் கடைசி புகலிடம்... அங்கும் ஊழல்... நீதிபதி வேதனை!!
மதுரை: மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும்போது அரசு ஊழியர்கள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். ஊழலுக்கு, நீதித்துறையும் விதிவிலக்கு இல்லை. நீதித்துறையிலும் ஊழல் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. சரி செய்ய முன் வரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இன்று தெரிவித்துள்ளது.
நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் என்.உலகராஜ். இவர் பத்திரப் பதிவுத்துறை ஊழியர். லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் 2007-ல் பணி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் பணி நீக்க உத்தரவு மாற்றி அமைக்கப்பட்டு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து உலகராஜ் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தனது உத்தரவில், ''தமிழகத்தில் ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறையை பலப்படுத்த வேண்டும். கண்காணிப்புத் துறையினர் அரசு அலுவலகங்களில் அடிக்கடி சோதனை நடத்தி ஊழலை முழுமையாக ஒழிக்க வேண்டும். அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை ஆய்வு செய்தல் வேண்டும். ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பித்து அரசுத் துறைகளில் ஊழலை அரசு ஒழிக்க வேண்டும்.
நீதித்துறையில் ஊழல் என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அங்கும் ஊழல் நடைபெறுகிறது. அரசுத் துறையில் இருக்கும் ஊழலைவிட மோசமாக உள்ளது. நீதித்துறை என்பது சாதாரண மனிதனின் கடைசி புகலிடமாக உள்ளது.
ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதித்துறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டியது அரசியல் அமைப்புச் சட்டத்தின் கடமை. நீதித்துறையில் தற்போது உள்ள நடைமுறைகள் ஊழல்களை ஒழிப்பதற்கு போதியதாக இல்லை. ஊழல் தடுப்புத் துறையை நீதித்துறை பலப்படுத்த வேண்டும்.
மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. விசாரணை நடத்தப்பட்ட பின்னரே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என்றார்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications