Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேணும்னு பண்ணலைங்கய்யா.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனிடம் மன்னிப்பு கேட்ட மதுரை கலெக்டர்! முக்கிய ஆர்டர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணிலும் கார்த்திகை தீபத்தை ஏற்ற போதிய முன்னேற்பாடு செய்யாத அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியர் உரிய முடிவெடுத்து நாளை மறுநாள் 4 மணிக்கு தெரிவிக்க வேண்டும் எனவும், இந்த வழக்கில் இனி மாவட்ட ஆட்சியர் ஆஜராக தேவையில்லை, நாளை மறுநாள் காவல்துறை ஆணையர் மட்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்ற நிறைவேற்றாமல் இருக்கவில்லை எனவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் என மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என ராமரவிக்குமார், அரசபாண்டி ஆகியோர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் டிசம்பர் 1ஆம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில் டிசம்பர் 3ல் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் மனுதாரர்கள் மலைக்கு நேரில் சென்று தீபம் ஏற்ற உத்தரவிட்டார். அதன்படி தீபம் ஏற்றச் சென்ற மனுதாரர்கள், திருப்பரங்குன்றத்தில் 144 தடையாணை அமலில் இருப்பதாக கூறி திரும்ப அனுப்பப்பட்டனர்.

Madurai Thirupparankundram gr swaminathan tn govt

ஏற்கனவே 144 தடையாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது உறுதி செய்யப்பட்ட பிறகும், தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதையடுத்து மதுரை ஆட்சியர் உள்ளிட்ட மீது நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.மேலும், அரசபாண்டி தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல் அவமதிப்பு செய்ததற்காக அகில இந்திய பணிகளில் (ஐஏஎஸ், ஐபிஎஸ்) உள்ள அதிகாரிகள் மீது அகில இந்திய பணி விதிகள் (நடத்தை) 1968ல் அடிப்படையில் துறைரீதியான மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட ஆட்சியர் தரப்பு வழக்கறிஞரிடம் ஒரு முக்கிய கேள்வியை முன்வைத்தார். அதில், "நான் 15 நிமிடங்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் மாவட்ட ஆட்சியரிடம் பேசி, 5 நபர்கள் மட்டும் சென்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படுமா? என்பதை கேட்டுச் சொல்லுங்கள்" என்று கூறினார். மேலும், மாவட்ட நிர்வாகம் இதற்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், தற்போது நிலுவையில் உள்ள இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கத் தயாராக இருப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் தரப்பில், "சட்டத்தை செயல்படுத்த வேண்டியது தான் நிர்வாகத்தின் கடமை. சூழலை கருத்தில் கொண்டு தான், செயல்படுத்தப்பட்டது. சட்டத்தை கடைப்பிடித்து வருகிறேன்.பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறேன். வேண்டுமென்று கீழ்ப்படியாமல் இருக்க வேண்டும் என இல்லை. எனவே நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். அடுத்த கார்த்திகை தீபம் வருவதற்கு முன் உரிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என தெரிவிக்கப்பட்டது.

கோவில் சொத்து, இந்து சமய அறநிலையத்துறையின் சொத்து அல்ல. ஏற்கனவே ஏற்றிய இடத்தில் என்று சொல்லவில்லை, இந்துக்களுக்கு சொந்தமான பகுதியில் ஏற்ற உத்தரவு பிறப்பித்தோம்" என நீதிபதி தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரணை செய்த நீதிபதி, "நீதிமன்றம் சொல்லும் 5 நபர்களை கோவில் மலை உச்சிக்கு சென்று பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதித்தால் இந்த வழக்கையும் முடித்து வைப்பதாக கூறி, இது குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய முடிவெடுத்து நாளை மறுநாள் தெரிவிக்க உத்தரவிட்டும், நீதிபதி இந்த வழக்கில் இனி மாவட்ட ஆட்சியர் ஆஜராக தேவையில்லை, நாளை மறுநாள் காவல்துறை ஆணையர் மட்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை மறுநாள் ஒத்திவைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+