வாக்கு பதிவு நேரத்தை நீடிக்கலாம்.. சித்திரை திருவிழாவோடு லோக்சபா தேர்தலை நடத்தலாம்.. மதுரை ஆட்சியர்
Recommended Video

மதுரை: வாக்குப் பதிவு நேரத்தை நீடிக்கலாம். சித்திரை திருவிழாவோடு லோக்சபா தேர்தலை நடத்தலாம் என மதுரை ஆட்சியர் நடராஜன் தெரிவித்தார்.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் அந்த தேதிக்கு முன்பும் , பின்பும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் இந்த திருவிழாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வர். இந்நிலையில் தேர்தல் வைத்தால் அது வாக்குப் பதிவை பாதிக்கும் என்பதால் தேர்தல் தேதியை மாற்றி வைக்குமாறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சித்திரை திருவிழா
இந்த நிலையில் மதுரை சித்திரை திருவிழா குறித்து இன்றைக்குள் விளக்கம் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் நடராஜனுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஏற்பாடுகள்
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் சித்திரை திருவிழாவோடு மதுரையில் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவது சாத்தியம் உள்ளது. மதுரையில் ஏப்-18 ஆம் தேதி சித்திரை திருவிழா தேரோட்டம்,கள்ளழகர் எதிர் சேவை திருவிழா நடைபெறவிருப்பதால் அன்றைய தினம் வாக்குபதிவு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

விளக்கம்
மேலும் ஆணையம் அறிவித்தபடி தேர்தலை நடத்துவதற்கு ஆயத்தமாக உள்ளோம். திருவிழாவால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து கட்சியினர் தெரிவித்த கோரிக்கைகளை விளக்கியுள்ளோம்.

பணியாளர்கள்
தேர்தல் ஆணையம் சித்திரை திருவிழாவிற்கான உள்ளூர் விடுமுறை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பதில் அளித்துள்ளோம். தேர்தலின் போது கூடுதலாக காவலர்கள் மற்றும் மாநகராட்சிப் பணியாளர்களை கேட்டுள்ளோம்.

வாக்குப் பதிவு நேரத்தை நீட்டிக்க முடிவு
தேவைப்படும் பட்சத்தில் வாக்குபதிவு நேரத்தை நீட்டிக்கலாம் என்பது குறித்து விளக்கம் கொண்டுள்ளோம், தேர்தல் ஆணையம் அளிக்கும் ஆலோசனைகளை பொறுத்து தொடர்ந்து தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications