Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீர்மிகு நகரம்.. CITIIS 2.0 தமிழ்நாட்டில் மதுரைக்கு அடிச்ச லக்.. ரூ.135 கோடி ஒதுக்கீடு

Subscribe to Oneindia Tamil

மதுரை: இந்திய அளவில் சீர்மிகு நகரத்திற்கான CITIIS 2.0 திட்டத்திற்கு மதுரை மாநகராட்சி தேர்வாகியுள்ளது. இந்திய அளவில் தேர்வான 18 மாநகரங்களில் தமிழ்நாட்டில் இருந்து மதுரை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் மதுரை மாநகராட்சிக்கு ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், CITIIS 2.0 என்னும் நகரங்களைப் புதுமைப்படுத்தவும், ஒருங்கிணைக்கவும், நிலைநிறுத்தவும் மேற்கொள்ளப்படும் நகர முதலீடுகள் 2.0 திட்டத்துக்கு கடந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Madurai Corporation has been selected for the CITIIS 2 0 project for Smart City in India

CITIIS 2.0 என்பது பிரெஞ்சு மேம்பாட்டு நிறுவனம் (ஏஎப்டி) , மறுகட்டமைப்புக்கான கடன் நிறுவனம் (கேஎப்டபிள்யு), ஐரோப்பிய ஒன்றியம் (இயு), தேசிய நகர்ப்புற விவகார நிறுவனம் (என்ஐயுஏ) ஆகியவற்றுடன் இணைந்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால், உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.

இந்தத் திட்டம் நான்கு ஆண்டுகளுக்கு, அதாவது 2023 முதல் 2027ம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும். நகர அளவில் ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை, மாநில அளவில் பருவநிலை சார்ந்த சீர்திருத்த நடவடிக்கைகள், தேசிய அளவில் நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் அறிவைப் பரப்புதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் சுழற்சி பொருளாதாரத்தை மேம்படுத்தும் போட்டித் திட்டங்களுக்கு இந்தத் திட்டம் ஆதரவளிக்கும்.

CITIIS 2.0- க்கான நிதியில், ரூ.1,760 கோடி கடன் ஐரோப்பிய யூனியன் வழங்கும் ரூ.106 கோடி ( 12 மில்லியன் யூரோ) தொழில்நுட்ப உதவி மானியம் ஆகியவை அடங்கும்.

CITIIS 1.0-இன் அனுபவம், வெற்றிகளை மேம்படுத்துவதையும் அளவிடுவதையும் CITIIS 2.0 நோக்கமாகக் கொண்டுள்ளது. CITIIS 1.0 வின் மொத்தச் செலவு ரூ. 933 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அளவில் சீர்மிகு நகரத்திற்கான CITIIS 2.0 திட்டத்திற்கு மதுரை மாநகராட்சி தேர்வாகியுள்ளது. இந்திய அளவில் தேர்வான 18 மாநகரங்களில் தமிழ்நாட்டில் இருந்து மதுரை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் மதுரை மாநகராட்சிக்கு ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மதுரை மாநகராட்சி இந்த திட்டத்தின் மூலம் புதுப்பொலிவு பெறப்போகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+