தலைக்கேறிய சபலம்.. பளபள நகை.. தம்பதிக்கு குறுக்கே திருமங்கலம் பெண் எஸ்.ஐ. போலீஸ்.. விழிக்கும் மதுரை

Subscribe to Oneindia Tamil

மதுரை: தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், போலீசார் இந்த விவகாரத்தில் தலையிட நேர்ந்துள்ளது. அந்தவகையில், இன்ஸ்பெக்டர் கீதாவிடம் புகார்கள் சென்றுள்ளன.. இதையடுத்து நடந்த சம்பவம்தான், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்.. இவர் சாப்ட்வேர் என்ஜினியர் ஆவார்.. இவரது மனைவி பெயர் அபிநயா.. இந்த தம்பதிக்கு சமீப காலமாகவே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.. இதனால், இருவருமே பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

madurai couple thirumangalam police si

புகார்கள்: மேலும், தங்கள் பிரச்சனை தொடர்பாக, இவர்கள் இருவருமே, திருமங்கலம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், புகார் அளித்திருந்தனர். இந்த புகார்கள் தொடர்பான விசாரணையை, அப்போது திருமங்கலம் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த கீதா என்பவர், விசாரித்து வந்தார்..

எனவே, திருமணத்திற்கு தன்னுடைய பெற்றோர் நகைகளை அளித்ததாகவும், அந்த நகைகளை ராஜேஷிடமிருந்து வாங்கித்தருமாறும் அபிநயா இன்ஸ்பெக்டர் கீதாவிடம் கேட்டுள்ளார்.. இதையடுத்து ராஜேஷ், தன்னிடமிருந்த 95 பவுன் நகைகளையும் இன்ஸ்பெக்டர் கீதாவிடம், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே ஒப்படைத்து விட்டார். ஆனால், இன்ஸ்பெக்டர் கீதாவுக்கு நகைகளை பார்த்ததுமே, தன்னிடமே வைத்துக் கொள்ள சபலம் துளிர்த்துள்ளது.

அந்த நகைகளை அபிநயாவிடம் தரவில்லை.. மொத்த நகையையும் தன்னிடமே வைத்துக் கொண்டு, வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

சந்தேகம்: இதனால் சந்தேகமடைந்த ராஜேஷ், திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இதுகுறித்து புகார் தந்தார்.. இந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் கீதாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான், அபிநயா தந்த நகைகள் அனைத்தையும் இன்ஸ்பெக்டர் கீதா தன்னிடமே வைத்திருப்பது உறுதியானது.

அதுமட்டுமல்ல, அந்த நகைகளை தன்னுடைய சொந்த தேவைக்காக, ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வைத்து ரூ.43 லட்சம் பணத்தையும் பெற்றிருப்பது தெரிய வந்தது.. இதனால் தப்பிக்க முடியாமல் ஏடாகூடமாக சிக்கிவிட்டதால், நகையை திருப்பி தருவதற்கு கால அவகாசம் கேட்டார் இன்ஸ்பெக்டர் கீதா.. அதன்படியே காலம் அவகாசம் தரப்பட்டது..

அசிங்கம்:
சில நாட்களுக்கு முன்பு அடகு வைத்த நகைகளில், ஒருசிலவற்றை மட்டும் திருப்பிக்கொடுத்துள்ளார்.. ஆனால், 70 பவுனுக்கும் மேல் இன்னும் நகையை தரவில்லை.. இது தொடர்பாக தொடர்ந்து கால தாமதம் செய்து வந்த நிலையில், இந்த வழக்கு குறித்து விசாரித்த டி.ஐ.ஜி. ரம்யபாரதி, இன்ஸ்பெக்டர் கீதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். நகையை கடைசிவரை திருப்பித்தராத வழக்கில் இன்ஸ்பெக்டர் கீதாவை போலீசார் கைது செய்துள்ளது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+