“மோடியின் அப்பா வந்தாலும்..” உறுதியாக சொன்ன உதயநிதி! மதுரையில் பதிலடி கொடுத்த மோடி!
மதுரை: மோடியின் அப்பாவே வந்தாலும், திமுக பயப்படாது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். இந்நிலையில், மதுரை என்டிஏ பொதுக்கூட்டத்தில், உதயநிதிக்கு மோடி பதிலளித்துள்ளார்.
கடந்த 22ம் தேதி கோயம்புத்தூரில், திமுக இளைஞர் அணி மேற்கு மண்டல மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 8 மாவட்டங்களிலிருந்து சுமார் 1 லட்சம் தொண்டர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "மக்களிடம் இருந்து பறிக்கும் ஆட்சி பாஜக ஆட்சி, மக்களுக்கு கொடுக்கும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. மகளிர் உரிமைத் தொகை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சியினர் நினைத்தனர். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டத்தையும் பாஜக அரசு அறிவிக்கவில்லை.
அரசியலில் முரட்டு பக்தர்கள் பார்த்திருப்போம் ஆனால் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமிதான். 2019ல் அதிமுகவை பாஜகவுக்கு அடகு வைத்த எடப்பாடி 2021ல் அதிமுகவை பாஜகவிடம் குத்தகைக்கு விட்டார். 2026ல் அதிமுகவை பாஜகவுக்கு மொத்தமாக விற்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவை அழிவுப்பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறார் எடப்பாடி. எம்ஜிஆர் இருந்திருந்தால் எடப்பாடி பழனிசாமியை பார்த்து கண் கலங்கியிருப்பார். திமுகவினர் EDக்கும் பயப்படமாட்டோம். மோடிக்கும் பயப்பட மாட்டோம். மோடியின் தந்தையே வந்தாலும் அவருக்கும் திமுக பயப்படாது. திராவிடமாடல் ஆட்சியில் இருக்கும் என்ஜின் வளர்ச்சிக்கானது" என்று பேசியிருந்தார்.
இதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துள்ளார். ஜனநாயக நாட்டில் யாரும், யாருக்கும் பயப்பட தேவையில்லை என்றும், இதை பாஜக அரசு உறுதி செய்திருப்பதாகவும், இதற்கான பாராட்டாகத்தான் என் தந்தை குறித்து வந்த விமர்சனங்கள் இருப்பதாக கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications