திருப்பதி லட்டுக்கு நெய் விற்ற பணம் கோவிந்தா - மதுரை ஆவின் அதிகாரிகள் 5 பேர் சஸ்பெண்ட்

மதுரை ஆவின் நிறுவனத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. இதில், பால் உபபொருட்கள் விற்பனையில் ரூ .13.71 கோடி முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து 5 பேர் சஸ்பெண்ட் செ

Subscribe to Oneindia Tamil

மதுரை: நெய், வெண்ணெய், உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ததில் ரூ .13.71 கோடி முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து மதுரை ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பதி தேவஸ்தானத்துக்கு லட்டு தயாரிப்புக்காக மதுரை ஆவின் நிறுவனத்திலிருந்து நெய் அனுப்பியது மற்றும் வெளிச்சந்தையில் நெய், வெண்ணெய் போன்ற பொருட்கள் விற்பனை செய்தது உள்ளிட்டவற்றில் இந்த முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Madurai Five Aavin employees suspended for 13.71 crore scam

அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனத்தில் தினமும் பால் கொள்முதல் செய்யப்பட்டு பாக்கெட்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வருவது போக தயிர், வெண்ணை, நெய் உள்ளிட்ட பல்வேறு உபபொருட்கள் தயாரிக்கப்படுகிறது. ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் நெய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது.

விலையும் குறைவு தரமானதாகவும் இருக்கும் என்பதால் ஆவின் நிறுவன உபபொருட்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனையடுத்து உற்பத்தி அதிகரிக்கப்பட்டு அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே மதுரை ஆவின் நிறுவனத்தில் பால் பொருட்கள் விற்பனை செய்வதில் முறைகேடுகள் நடந்து வருவதாக, கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

பால் உபபொருட்கள் விற்பனையில் கிட்டதட்ட 13.71 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இது குறித்த புகார்கள் ஆவின் நிர்வாக இயக்குனர் நந்தகோபாலிடம் அளிக்கப்பட்டுள்ளன. இதுநாள் வரை புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது ஆட்சி மாறிய உடன் காட்சிகளும் மாறியுள்ளன.

முறைகேடுகள் குறித்து வந்த புகார்களின் அடிப்படையில் சென்னை ஆவின் துணை பதிவாளர் அலெக்ஸ் தலைமையிலான அலுவலர்கள் குழு, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மதுரை ஆவின் நிறுவனத்தில் தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

முதற்கட்ட விசாரணையின் முடிவில், மேலாளர் மணிகண்டன், உதவி மேலாளராக பணிபுரிந்த கிருஷ்ணன், சேகர், உள்பட 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் முறைகேடுகள் குறித்து தோண்ட தோண்ட பல பூதங்கள் வெளிப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+