Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் சிபிஐ இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய ஹைகோர்ட் கிளை உத்தரவு

Subscribe to Oneindia Tamil

மதுரை: சாத்தான்குளத்தில் போலீசார் தாக்குதலில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் போலீசாரால் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்ட வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கை முதலில் சிபிசிஐடி போலீசார் தற்காலிகமாக விசாரித்தனர்.

Madurai HC bench asks CBI to file status report on Sathankulam custodial deaths case

பின்னர் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் 10 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமையன்று நீதிபதிகள் சத்யநாராயணா, ராஜமாணிக்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி சார்பில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது சிபிஐ அதிகாரிகளில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது; விரைவில் அறிக்கை தாக்கல் செய்வோம் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், மூடி சீலிட்ட கவரில் இடைக்கால அறிக்கையை ஆக.17-ல் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+