டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முறைகேடு.. 4 பல்கலைக்கழகங்களில் ரெய்டு நடத்தலாம்.. ஹைகோர்ட் அதிரடி
மதுரை: அண்ணாமலை பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகங்களிலும் போலி சான்றிதழ் பெறப்பட்டு குரூப்-1 பணி நியமனம் பெற்ற விவகாரத்தில் உரிய ஆவணங்களை தர மறுத்தால் 4 பல்கலைக்கழகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தலாம் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சக்திராவ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற கிளையில் கடந்த 2021-ம் ஆண்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் , கடந்த 2019-ம் ஆண்டில் நடந்த குரூப்-1 தேர்வில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. இதை பெற தொலைநிலைக் கல்வியில் படித்து போலி சான்றிதழ் சமர்ப்பித்து பலர் பணி நியமனம் பெற்றிருக்கிறார்கள் என்றார்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, இந்த புகார் குறித்து தமிழக அரசு மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அந்த உத்தரவுகளை அதிகாரிகள் முறையாக நிறைவேற்றவில்லை. எனவே அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் சக்திராவ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, மேற்கண்ட பணியிடங்களில் சேர்ந்தவர்கள் தாக்கல் செய்த தமிழ்வழி கல்வி சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து, குரூப்-1 அதிகாரிகளாக பணியாற்றும் சப்-கலெக்டர், வணிகவரித்துறை அதிகாரி உள்ளிட்ட 4 அதிகாரிகள் மற்றும் காமராஜர் பல்கலைக்கழக பணியாளர்கள் உள்பட 9 பேர் மீது வழக்குபதிவு செய்திருக்கிறது. இந்நிலையில் இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பெயரில் போலி சான்றிதழ் சமர்ப்பித்து குரூப்-1 பணி நியமனம் பெற்றது உறுதியாகி இருக்கிறது. மேலும் 22 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதேபோல அண்ணாமலை பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகங்களிலும் போலி சான்றிதழ் பெறப்பட்டு உள்ளது. இதற்கான ஆவணங்களை இந்த பல்கலைக்கழகங்கள் 2 ஆண்டுகளாக தராமல் உள்ளன. இதனால் இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.
எனவே மேற்கண்ட 4 பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களையும் இந்த வழக்கின் எதிர்மனுதாரர்களாக நாங்கள் சேர்க்கிறோம். இந்த வழக்கில் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பில் ஒரு நபரை நியமித்து, பல்கலைக்கழகங்களில் இருந்து உரிய ஆவணங்களை பெற வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை மேலும் கால அவகாசம் வழங்க நாங்கள் விரும்பவில்லை. குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் நோக்கத்தில் செயல்படுபவர்கள் மீதும் குற்றவியல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே விசாரணையின் நோக்கத்தை விரிவுபடுத்தவும், ஆவணங்களை மறைத்து குற்றவாளிகளை பாதுகாப்பவர்களை வழக்கில் சேர்க்கவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுமதி அளிக்கிறோம்.
பல்கலைக்கழகங்கள் தரப்பில் இருந்து ஆவணங்களைத்தர தாமதித்தால் சம்பந்தப்பட்ட இடத்துக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் நேரில் சென்று, சோதனை நடத்தி ஆவணங்களை சேகரிக்கலாம். இந்த வழக்கில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து வருகிற 28-ந்தேதி மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications