சிக்கன் 65 ஓகே.. அதென்ன என்-95 சிக்கன்?.. மூலிகை ஆம்லெட்டாம்.. கலக்கும் தூங்கா நகரமான மதுரை!
மதுரை : மதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள, ஓட்டலில் கொரோனா மூலிகை ஆம்லெட், என் 95 சிக்கன், கொரோனா பன்னீர் லாலிபாப் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது. சென்னையில் அதிகமாக இருந்த நோய் தொற்று தற்போது குறைந்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் அதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதிலும் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால் இங்கு ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று முழு ஊரடங்கு.. சேலம், மதுரையில் ஈ, காக்கா இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் சாலைகள்
வெங்காய போண்டா
இந்த நிலையில் மக்களுக்கு மாஸ்க் அணிவதன் விழிப்புணர்வையும் கொரோனா நோயின் வீரியத்தையும் உணர்த்துவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள டெம்பிள் சிட்டி ஹோட்டலில் மாஸ்க் பரோட்டா, கொரோனா தோசை, மாஸ்க் வெங்காய போண்டா உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டன.
ரயில் நிலையம்
இந்த நிலையில் தற்போது அதே மதுரையில் ரயில் நிலையம் அருகே உள்ள வெஸ்டர்ன் பார்க் அர்ச்சனா ஹோட்டலில் கொரோனா மூலிகை ஆம்லெட், என் 95 சிக்கன் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஹோட்டல் நிர்வாக பங்குதாரர் செல்வம் கூறுகையில் மதுரையில், கொரோனா போண்டா, தோசை, மாஸ்க் பரோட்டா தயாரித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
உணவு தயாரிக்க
எங்களுடையது, அசைவ ஓட்டல் என்பதால், அதற்கு ஏற்ப விழிப்புணர்வு உணவுகளை தயாரிக்க திட்டமிட்டோம். 'செஃப்' குழுவினருடன் ஆலோசனை செய்து, மஞ்சள் பொடி, துளசி, இஞ்சி கலந்த கொரோனா மூலிகை ஆம்லெட்டை அறிமுகம் செய்தோம். மக்களுக்கு, மாஸ்க் அணிவதன் அவசியத்தை உணர்த்த, என் 95 சிக்கன், சைவ உணவு பிரியர்களுக்காக, கொரோனா பன்னீர் லாலிபாப் தயாரிக்கிறோம்.
பாதுகாப்பு அம்சங்கள்
ஓட்டலுக்கு சாப்பிட, பார்சல் வாங்க வருவோருக்கு, இலவசமாக மாஸ்க் தருகிறோம். உடல் வெப்பநிலை பரிசோதனை, கைகளை சுத்தம் செய்தல் போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் பின்பற்றுகிறோம் என்று தெரிவித்தார். கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த ஹோட்டல்கள் சமூக பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.