மதுரை அழகர் கோயில் வளாகத்தில் ஆடித் திருவிழா தேரோட்டம் - பக்தர்களுக்கு அனுமதியில்லை
மதுரை அழகர்கோயில் ஆடித் திருவிழாவானது, பக்தர்கள் இன்றி கோயில் வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை: கள்ளழகர் அருள்பாலிக்கும் அழகர் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. இதனையடுத்து வைகாசியில் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த மண்டபத்தில் தேவியர்களுடன் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆடி மாதம் பத்து நாட்கள் தேரோட்ட பிரம்மோற்சவம் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை முன்னிட்டு ஆடித் திருவிழாவானது, பக்தர்கள் இன்றி கோயில் வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே ஆலயங்கள் மூடப்பட்டுள்ளன. பங்குனி உத்திரம், சித்திரை திருவிழா, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம் என அனைத்து விழாக்களும் பக்தர்கள் அனுமதியின்றி கோவில் வளாகத்திலேயே எழுந்தருளினார்.

சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளும் கள்ளழகர் இந்த ஆண்டு கோவில் வளாகத்திலேயே தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். இந்த நிகழ்ச்சி ஆன்லைன் மூலம் ஒளிபரப்பானது. பக்தர்கள் வீட்டில் இருந்தே கள்ளழகரை தரிசனம் செய்தனர்.
இதே போல ஆடி மாதத்தில் நடைபெறும் தேரோட்டமும் பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆலய துணை ஆணையாளருமான அனிதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அழகர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழாவானது பத்து நாள்கள் நடைபெறுவது வழக்கம். மேலும், விழாக்காலங்களில் பெருமாள், தினசரி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி தேரோடும் வீதி, கோட்டை வாசல் வரை சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த ஆண்டு கொரோனாவையொட்டி ஆடித்திருவிழாவானது, ஜூலை 20ஆம் தேதி கோயில் வளாகத்தில் வைத்து, பக்தர்கள் இன்றி விழாக்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications