பணத்தை திருடிட்டாங்கே மொதலாளி.. என்னாது.. அய்யா நான்தாய்யா திருடினேன்!
Recommended Video
மதுரை: தானே திருடிய பணத்தை காணவில்லை என காவல்துறையினரிடம் நாடகமாடியவர் கையும் களவுமாக சிக்கினார்.
மதுரை மேலமாசி வீதி கந்தமுதலி தெரு பகுதியில் நித்திஷ் ஜெயின் என்பவர் எலெக்ட்ரானிக் மொத்த வியாபாரம் நிறுவனம் நடத்திவருகிறார். அந் நிறுவனத்தில் மதுரை ஜீவாநகர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் பணிபுரிந்துள்ளார்.

தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து தனது நிறுவனத்திடம் எலெக்ட்ரானிக் உபகரணங்களை வாங்கிய சிறுசிறு கடைகளிலிருந்து பணம் வசூல் செய்துவிட்டு வருமாறு நித்திஷ் கூறிய நிலையில் பிரகாஷ் பல்வேறு பகுதிகளுக்கு சென்று 1 லட்சத்து 44ஆயிரம் ரூபாயை வசூல் செய்துவிட்டு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் மதுரை கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே தன்னிடம் இருந்த பணத்தை மர்மநபர்கள் வழிப்பறி செய்துவிட்டதாக தனது முதலாளியிடம் கண்ணீர் மல்க பிரகாஷ் கூறியதையடுத்து காவல்துறையினருக்கு தொலைபேசி புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஜெய்ஹிந்த்புரம் போலிசார் பணத்தை இழந்ததாக கூறிய ஊழியர் பிரகாஷை அழைத்து சென்ற போலிசார் விசாரணையை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனையடுத்து போலிசார் வழக்கம்போல தனது விசராணையை தீவிரபடுத்த தொடங்கி உதையோடு சேர்ந்த கிடுக்குபிடி விசாரணையால் கதிகலங்கிய பிரகாஷ் தானே பணத்தை எடுத்துவிட்டு வழிப்பறி நாடகம் நடத்தியதாகவும், அந்த பணத்தை தனது நண்பரான வில்லாபுரத்தை சேர்ந்த பாலுமணி என்பவரிடம் கொடுத்து அனுப்பி தனது கடனை அடைக்க சொன்னதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து பிரகாஷ் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பாலுமணி ஆகிய இருவரையும் போலிசார் கைது செய்தனர். பணத்தை பறிமுதல் செய்தனர். பணத்தை தானே திருடிவிட்டு கொள்ளை போனதாக நாடகமாடி முதலாளியை ஏமாற்றிய நிலையில் போலிசாரின் விசாரணையில் உண்மையை ஒப்புகொண்டு சிறைசென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications