மதுரை மேயர் இந்திராணியின் செண்டிமென்ட்! பூட்டியே கிடக்கும் அரசு பங்களா! பின்னணி என்ன?
மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் தனக்கு கொடுக்கப்பட்ட அரசு பங்களாவில் செண்டிமெண்ட் காரணமாக குடியேற ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மதுரை அண்ணா நகரில் உள்ள மேயர் பங்களாவானது மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்திராணி மட்டும் தான் இப்படி என்று எண்ணிவிட வேண்டாம், இதற்கு முன் மதுரை மேயர்களாக இருந்தவர்களும் அந்த பங்களாவில் குடியேறாமல் இருந்தது கவனிக்கத்தக்கது.

மதுரை மேயர்
மதுரை மாநகராட்சி மேயராக இருப்பவர் இந்திராணி. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் சிபாரிசு மூலம் மேயர் பதவியில் அமர்ந்த இவர், தனது ஒவ்வொரு
நடவடிக்கையையும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுவிடுவார்.
குடும்பத்தலைவியாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் இந்திராணி என்பதால், இப்போது தான் அரசியல் அரிச்சுவடியை கற்று வருகிறார்.

என்ன செண்டிமென்ட்
இதனிடையே மேயருக்கு கொடுக்கப்பட்டுள்ள அரசு பங்களாவில் குடியேற அவர் ஆர்வம் காட்டவில்லை என்பது நமக்கு கிடைத்துள்ள புது தகவலாகும். இதற்கு காரணம்
செண்டிமெண்ட் தான் எனக் கூறப்படுகிறது. இந்திராணிக்கு மட்டும் தான் இப்படியொரு செண்டிமெண்டா என ஆராய்ந்தால், ஏறத்தாழ கடந்த 20 ஆண்டுகளாகவே இந்த செண்டிமெண்ட் மதுரை மேயர்களாக இருந்தவர்கள் மத்தியில் இருந்து வருவதை அறிய முடிகிறது.

அரசு பங்களா
2001-ம் ஆண்டுக்கு பிறகு மதுரை மேயராக இருந்த யாரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அரசு பங்களாவில் குடியேறவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. திமுகவை சேர்ந்த குழந்தைவேலு மேயராக இருந்தபோது தனது
குடும்பத்தினருடன் அந்த பங்களாவில் வசித்தார்.
இவருக்கு அடுத்தப்படியாக மதுரை மேயரான ராமச்சந்திரன், தேன்மொழி கோபிநாதன், ராஜன் செல்லப்பா என யாரும் அந்த வீட்டுக்கு குடிபோகவில்லை.

செண்டிமென்ட் காரணம்
ராஜன் செல்லப்பா கட்சியினரை சந்திக்கவும், முக்கிய ஆலோசனைகள் நடத்தவும் மட்டும் அந்த இல்லத்தை பயன்படுத்தினார். மதுரை அண்ணா நகரில் அந்த இல்லம்
இன்னமும் மாநகராட்சி செலவில் முறையாக பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மதுரையின் தற்போதைய மேயரான இந்திராணியாவது இந்த செண்டிமெண்டை உடைத்தெறிந்து மேயர் பங்களாவில் குடியேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் நடக்கவில்லை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications