Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆன்டி இந்தியன் நினைவிருக்கா? இப்போது அவங்களே அப்படி ஆயிட்டாங்க! மதுரை எம்பி சு.வெங்கடேசன் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டின் அழைப்பிதழில் 'இந்திய' குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக, 'பாரதத்தின்' குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தியா கூட்டணி என்கிற பெயரில்தான் அனைத்து கூட்டங்களையும் எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகள் இந்த 'இந்தியா' எனும் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று பாஜக தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில் நாட்டின் பெயரை இந்தியா என்பதிலிருந்து பாரதம் என்று மாற்ற மத்திய அரசு முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Madurai MP Su Venkatesan has criticized that the BJP itself has become anti-Indian

இதற்கேற்றாற்போல பாஜக தலைவர்கள் பலர், "இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். பாரதம்தான் நமது உண்மையான பெயர்" என்று கூறி வருகின்றனர். இந்த சலசலப்புகள் ஒருபுறம் இருக்கையில் மறுபுறம் மற்றொரு பஞ்சாயத்து வெடித்து கிளம்பியிருக்கிறது. அதாவது இந்த மாதம் 9,10 தேதிகளில் டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 20 நாட்களின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இவர்களுக்கு இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கான அழைப்பிதழ்கள் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் 'பாரதத்தின்' குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக 'இந்திய' குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் இம்முறை பாரதம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது, ஏற்கெனவே இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வரும் கருத்தியலுக்கு வலு சேர்ப்பதை போல இந்த நடவடிக்கை இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் 1ன் படி, 'இந்தியாவாக இருந்த பாரதம் மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்' என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது இந்த மாநிலங்களின் ஒன்றியம் கூட தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது" என்று ட்வீட் செய்து விமர்சித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் விமர்சித்துள்ளார்.

அதாவது, "ஆன்டி இந்தியன் என்று அடுத்தவர்களை சொல்லியே பழக்கப்பட்டவர்கள், இப்பொழுது தாங்களே ஆன்டி இந்தியன் ஆகிப்போனார்கள். 'தமிழ்நாடு' என்ற பெயரை மாற்ற முயற்சித்தவர்கள் இப்பொழுது 'இந்தியா' என்ற பெயரை மாற்ற முயற்சிக்கின்றனர். இந்தியாவைக் கண்டு பிரிட்டிஷாருக்கு பிறகு அதிகம் பயப்படுகிறவர்களாக பாஜகவினர் மாறியுள்ளனர். பெயர் மாற்றத்திற்கு பின்னால் இருப்பது தேசப்பற்றல்ல. தேர்தல் பயம், இந்தியா வெல்லும்" என்று விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா உட்பட பல பாஜக தலைவர்கள் அடிக்கடி ஆன்டி இந்தியன் எனும் வார்த்தையை பயன்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+