Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம்.. போராட்டத்தை அறிவித்தபின் அண்ணாமலை முழிக்கிறார்.. சு.வெங்கடேசன்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை - தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்திற்காக போராட்டத்தை அறிவித்துவிட்டு அதிமுக மற்றும் அண்ணாமலை இரு தரப்பும் முழித்து கொண்டிருப்பதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் கிண்டல் செய்துள்ளார். தமிழ்நாடு அரசை குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் அரசியல் செய்கிறார்கள் என்று கூறிய சு.வெங்கடேசன், மத்திய அரசு ரயில்வே துறையில் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்தை தமிழக அரசு கைவிடக் கோரியதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவிக்க, உடனடியாக தமிழக அரசை கண்டித்து பாஜக மற்றும் அதிமுக தரப்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

annamalai madurai - thoothukudi railway project su venkatesan

தொடர்ந்து 5 நாட்களுக்கு பின் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் தெரிவித்தார். அதில், மதுரை - தூத்துக்குடி இடையிலாக ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கான நில எடுப்பில் எந்த சிக்கலும் இல்லை என்று கூறினார். இதற்கு அமைச்சர் சிவசங்கர், மதுரை எம்பி சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் பதிலடி கொடுத்தனர்.

இந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் கண்டு ரசித்த பின் செய்தியாளர்களை சந்தித்து சு.வெங்கடேசன் பேசுகையில், உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழர் பண்பாட்டின் முக்கியமான அடையாளம். உழவர் திருநாளின் குறியீடு. உழவில் மனிதனுக்கும், பிற உயிர்களுக்கும் இருக்கும் உறவின் வெளிப்பாடு தான் இந்த விளையாட்டு.

இதில் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்தார். தொடர்ந்து மதுரை - தூத்துக்குடி இடையிலான ரயில் பாதை திட்டம் குறித்த கேள்விக்கு, இந்த விவகாரத்தில் செய்தியாளர்கள் மீது எந்த தவறும் கிடையாது. அந்த காணொளியை பார்த்தால், வேறு எந்த சத்தமும் இல்லை. அந்த செய்தியாளரும் மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி ரயில் திட்டம் குறித்த தெளிவாக கேள்வி கேட்கிறார்.

அதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தமிழக அரசு வேண்டாம் என்று கூறிவிட்டதாக சொல்கிறார். அந்த செய்தி தவறானது என்று ரயில்வே அமைச்சர் பேட்டி கொடுத்த ஒரு மணி நேரத்தில் ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுவிட்டோம். ஆனால் அவர்கள் எந்த மறுப்பும் கூறவில்லை. அந்த செய்திக்கு 5 நாட்களாக உயிர் கொடுத்து கொண்டே இருந்தார்கள்.

இது திட்டமிட்டு செய்கிற வேலை. மத்திய அரசு குறிப்பாக ரயில்வே துறையில் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டத்திற்காக நாடாளுமன்றத்தில் 5 முறை பேசி இருக்கிறேன். அதற்கான நிதியை கொடுக்காமல் மத்திய அரசு தாமதித்து வருகிறது. வரும் பட்ஜெட்டிலாவது அதற்கான நிதியை முழுமையாக ஒதுக்க வேண்டும்.

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டியளித்த சில மணி நேரங்களிலேயே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டத்தை அறிவிக்கிறார். அதன் தொடர்ச்சியாக அதிமுகவும் போராட்டத்தை அறிவிக்கிறது. ரயில்வே துறை எப்படி இயங்குகிறது என்பதை பற்றிய குறைந்தபட்ச புரிதல் இருந்தாலே, செய்தியின் உண்மைத்தன்மையை அறிந்திருக்கலாம்.

ஆனால் தமிழ்நாடு அரசை உடனடியாக குற்றம் சொல்ல வேண்டும் என்ற அரசியலில் இருந்து அணுகிறார்கள். தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான கோபமாக இது பிரதிபலிக்கவில்லை. எனவே, அதிமுக அறிவித்த போராட்டத்தையும், அண்ணாமலை அறிவித்த போராட்டத்தையும் என்ன செய்வதென தெரியாமல் முழிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+