ஃபுல் சேஃப்டி.. ஆல் ஓவர்! தீ விபத்து குறித்து ஹைகோர்டில் அடித்து சொன்ன மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்
கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு முறையான அனுமதி வாங்கிய பிறகே திறக்கப்பட்டது என்று சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது
சென்னை: அனைத்து வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் முழுமையடைந்த பிறகே மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடம் திறக்கப்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அதன் நிர்வாகம் விளக்கமளித்து இருக்கிறது.
மதுரையில் செயல்பட்டு வரும் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸுக்கு தற்காலிகமாக தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு முறையான அனுமதி வாங்கிய பிறகே திறக்கப்பட்டது என்று சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே லேக் ஏரியா பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட 10 மாடிகளை கொண்ட சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் வணிக கட்டிடம் புதிதாக திறக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த கட்டிடத்தின் 9 வது மாநிலத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

முழுமையடையாத கட்டிடம்?
கடுமையான புகை வெளியேற காரணத்தால் அங்கிருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டன. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். உள்கட்டமைப்பு பணிகள் முழுமையடையாத சூழலில் கட்டிடத்தை திறந்ததே இந்த தீ விபத்துக்கு காரணமாக சொல்லப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்த நிலையில் மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு பணிகள் நிறைவடைந்த பிறகே கட்டிடத்தை திறக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி திபேன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்து இருக்கிறார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

சரவணா ஸ்டோர்ஸ் விளக்கம்
கடந்த சில நாட்களுக்கு முன் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மார்ச் 13 ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்தார். இந்த நிலையில் இந்த வழக்கு திங்கள்கிழமை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில், "கட்டிடத்தில் தீ விபத்து போன்ற அவசர காலக்கட்டங்களில் பாதுகாப்பதற்கான அனைத்து வித ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

வழக்கு ஒத்திவைப்பு
முழுமையாக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பிறகே சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கட்டிடம் திறக்கப்பட்டது." என விளக்கமளிக்கப்பட்டு இருக்கிறது. சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகத்தின் இந்த பதிலை கேட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி முரளி சங்கர் செவ்வாய்கிழமை இந்த வழக்கு விசாரணை நடைபெறும் என்று ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications