மானாமதுரையில் பழிக்கு பழித்தீர்க்க கொலை முயற்சி.. தற்காப்புகாக துப்பாக்கிச் சூடு நடத்திய காவலாளி
Subscribe to Oneindia Tamil
மானாமதுரை: மானாமதுரையில் வங்கியில் கொலை முயற்சியில் ஈடுபட முயன்றவர்கள் மீது காவலாளி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள கனரா வங்கியில் தங்கமணி காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இன்று காலை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை சரமாரியாக தாக்கி கொலை செய்ய முயற்சித்தது.

அப்போது அவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை பயன்படுத்தி அந்த கும்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். வங்கி காவலாளி சுட்டதில் தமிழ்செல்வம் என்பவர் காயமடைந்தார். இதையடுத்து மற்றவர்கள் தப்பிவிட்டனர்.
விசாரணையில் அமமுக நிர்வாகி கொலை வழக்கில் தங்கமணிக்கு தொடர்பிருப்பதாகவும் கொலைக்கு பழி வாங்க அவரை கொல்ல ஒரு கும்பல் ஒரு வங்கிக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பலை தற்காப்புக்காக சுட்டதும் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications