மனு ஸ்மிருதியை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்!
மதுரை: மனு ஸ்மிருதியை மேற்கோள் காட்டி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. "தனது குடிமக்களை பாதுகாப்பதே ஒரு அரசனின் உயரிய கடமை என மனு ஸ்மிருதி வரையறுத்துள்ளது" எனக் குறிப்பிட்டு மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்,
வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள், நிறுவனங்களிடம் இருந்து இழப்பீடு பெறுவதற்கு சட்ட உதவிகளை வழங்குவதற்கான கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும் என பிறப்பித்த உத்தரவில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மலர்விழி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "என் கணவர் மாரிமுத்து மத்திய ஆப்பிரிக்காவுக்கு 2021-ம் ஆண்டு தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றார். அங்கு எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். என் கணவர் இறப்புக்கு கேமரூன் நாட்டுத் தொழிற்சாலை இந்திய மதிப்பில் 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தது. இந்த இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடித்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "மன்னன் என்பவன் மக்களை மகிழ்ச்சியாகவும் வளமாகவும் வைத்திருக்க வேண்டும். மகாபாரதத்தில் வருமானத்தில் ஆறில் ஒரு பங்கைப் பெற்றாலும் மக்களைப் பாதுகாக்கத் தவறிய மன்னன் பாவியாகிறான் என்று கூறப்பட்டுள்ளது.
கௌடில்யர், தனது குடிமக்களின் மகிழ்ச்சியிலேயே மன்னனின் மகிழ்ச்சி அடங்கியுள்ளது என்றும், அவர்களின் நலனிலேயே மன்னனின் நலன் உள்ளது என்றும் கூறுகிறார். தனது குடிமக்களுக்கு எது மகிழ்ச்சி அளிக்கிறதோ, அதையே மன்னன் நல்லதாகக் கருத வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு மன்னனின் மிக உயர்ந்த கடமை தனது குடிமக்களைப் பாதுகாப்பதே என்று மனு ஸ்மிருதி கூறுகிறது. நிர்ணயிக்கப்பட்ட வரிகளை தனது குடிமக்களிடமிருந்து பெற்று அவர்களைப் பாதுகாக்கும் மன்னன் மட்டுமே தர்மத்தின்படி செயல்படுகிறான். நாம் 'மன்னன்' என்ற சொல்லுக்குப் பதிலாக 'அரசாங்கம்' என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
அரசாங்கம் வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டு பணப் பரிமாற்றங்கள் மூலம் பெரும் அந்நியச் செலாவணியை ஈட்டுகிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து அரசுகள் நன்மைகளைப் பெறும்போது, வெளிநாட்டு வேலைவாய்ப்பால் ஏற்படும் பிரச்சனைகள் எழும்போது அவர்களை மீட்க விரைந்து செயல்பட்டு உரிய இழப்பீடு கொடுப்பதும் கடமை. எனவே தற்போதுள்ள கால சூழலுக்கு ஏற்ப சட்டங்களில் சில திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும்.
தனது குடிமக்கள் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு கொள்கை சார்ந்த சட்ட திட்டத்தை வகுக்க வேண்டும். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டுள்ள மனுதாரர் ஏழையாக உள்ளார். எனவே அவர் வாழ்வாதாரம் பாதுகாக்க பட வேண்டும். இதற்காக மத்திய அரசு சட்டப் போராட்டத்தையும் நடத்த தயாராக இருக்க வேண்டும். இழப்பீடு வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய தூதரகம் எடுக்க வேண்டும்." என உத்தரவிட்டார்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் கடந்த 9 ஆம் தேதி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை சந்தித்தனர். அப்போது சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இயற்றப்பட்ட தீர்மான நோட்டீஸை அவரிடம் வழங்கினர். இந்த நோட்டீஸில் 120 எம்பிக்கள் கையெழுத்திட்டு உள்ளனர்.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications