கல்யாணத்துக்கு வந்த அமைச்சரிடம் கட்சிக்காரர் குமுறல்! அடுத்து நடந்த ட்விஸ்ட்! பற்றவச்சுடியே பரட்டை!
மதுரை: மதுரை மாவட்டம் மேலூருக்கு திருமண விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்த அமைச்சர் மூர்த்தியிடம், அங்கிருந்த கட்சிக்காரர் ஒருவர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணம் கேட்பதாக பற்ற வைக்க, சூடான அமைச்சர் மூர்த்தி நேராக ரெய்டு நடத்தி அதிகாரிகளை அலறவிட்டார்.
''இங்க வாயா உன்கிட்ட யாரு பணம் கேட்டது'', என பத்திரப் பதிவு அலுவலகத்திற்கே கட்சிக்காரரை அழைத்துச் சென்று அமைச்சர் மூர்த்தி கேள்வி எழுப்பியதால் அங்கிருந்த ஊழியர்கள் சிலர் ஆடிபோய்விட்டனர். மேலும், பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் சொத்து வாங்குவோர், விற்போரை தவிர கண்டவர்கள் உள்ளே வரக் கூடாது என்பதையும் கறாராக தெரிவித்தார்.

மேலூர் என்பது மதுரை வடக்கு மாவட்ட திமுக நிர்வாகத்திற்குட்பட்ட பகுதி. அமைச்சர் மூர்த்தி தான் மேலூர் பகுதிக்கும் மாவட்டச் செயலாளர். அப்படியிருக்கும் போது அவரிடம் கட்சிக்காரர்கள் முறையிடமாட்டார்களா என்பது பற்றி கூட யோசிக்கமல் ஓரிருவர் செய்த தவறால் ஒட்டுமொத்த அலுவலக ஊழியர்களும் அமைச்சரின் கோபத்திற்கு ஆளாக நேர்ந்தது.
இதனிடையே அந்த சோதனையின் போது எச்சரிக்கை மட்டும் செய்துவிட்டு சென்ற அமைச்சர் மூர்த்தி அடுத்த முறை புகார் வரும் பட்சத்தில் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்பதையும் தெரியப்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்.
அமைச்சர் மூர்த்தியை பொறுத்தவரை சற்று முன்கோபம் கொண்டவர். யாருக்கும் அஞ்சாமல் மனதில் பட்டதை பேசக்கூடியவர். ஒரு சில நேரம் அமைதியாகவும் ஒரு சில நேரம் ஆவேசமாகவும் ஆய்வுக்கூட்டங்களில் பேசக்கூடியவர். அமைச்சர் மூர்த்தி இதற்கு முன்னாள் சென்னை, ராமநாதபுரம் கோவை உட்பட பல இடங்களில் கள ஆய்வுக்கு சென்று சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தியிருக்கிறார். அப்போது பல இடங்களிலும் ரியல் எஸ்டேட் முகர்வர்களை கூட அலுவலகத்திற்குள் வரக்கூடாது என எச்சரிக்கவும் செய்தார்.
சார் பதிவாளர்களின் பெயரை தவறாக பயன்படுத்தி ஒரு சில இடங்களில் பத்திரப் பதிவு செய்ய வருவோரிடம் வசூல் வேட்டை நடத்தப்படுவதை யாரும் மறுக்க இயலாது. முடிந்தவரை பத்திரப்பதிவு நடைமுறையை டிஜிட்டல் மயமாக்கியுள்ள அரசு இன்னும் பல்வேறு புதுமைகளை நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications