பின்னால் நின்ற அமைச்சர் பிடிஆர்! முன்வரிசைக்கு அழைத்த உதயநிதி ஸ்டாலின்! கண்டுகொள்ளாத டி.ஆர்.பாலு!
மதுரை: மதுரையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவில் பின் வரிசையில் நின்றுகொண்டிருந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை முன் வரிசைக்கு வருமாறு அழைத்து நிறுத்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
மதுரையின் புதிய அடையாளமாக மாறப்போகும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது. முன்னதாக நூலக வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த கருணாநிதி சிலை திறப்பு நிகழ்வு நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

உதயநிதி ஸ்டாலினை மட்டும் உரிமையோடு கையை பிடித்து இழுத்து முன்னால் ஒட்டி நிற்குமாறு டி.ஆர்.பாலு அக்கறை காட்டினார். உள்ளூர் அமைச்சரும், அந்த நூலகம் கட்டுவதற்கான நிதியை நிதி மந்திரியாக பதவி வகித்த காலத்தில் ஒதுக்கியவருமான பழனிவேல் தியாகராஜனை பற்றி டி.ஆர்.பாலு கண்டுகொள்ளவில்லை. அவரும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இதை கவனித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பின்னால் நின்றுகொண்டிருந்த பழனிவேல் தியாகராஜனை முன் வரிசைக்கு அழைத்து நிறுத்தினார். இதன் மூலம் தனக்கும் பிடிஆருக்கும் எந்த பிணக்கும் இல்லை என்பதை உதயநிதி உணர்த்தியுள்ளார். கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவை பொறுத்தவரை முதலமைச்சர் ஸ்டாலினுடன் சீனியர் அமைச்சர்கள் மட்டுமே இருந்தனர்.
உள்ளூர் அமைச்சர்களான மூர்த்தியும், பழனிவேல் தியாகராஜனும் சற்று தள்ளியே நிற்கும் சூழல் காணப்பட்டது. அதேபோல் அவர்கள் இருவருமே சரியாக முகம் கொடுத்து பேசிக்கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications