கொரோனாவால் எனது உயிர் போனாலும் பரவாயில்லை... ஓட்டு போய்விடக் கூடாது... அமைச்சர் உதயகுமார் பேச்சு..!
மதுரை: கொரோனாவால் தனது உயிர் போனாலும் பரவாயில்லை ஓட்டு போய்விடக் கூடாது என்பதற்காக தொண்டர்களிடம் கை கொடுக்க வேண்டியது உள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சமூக இடைவெளியை பின்பற்றுமாறு கூறினால் அதை தொண்டர்கள் கேட்பதேயில்லை என கவலைத் தெரிவித்தார்.
மேலும், தொண்டர்களிடம் கை கொடுக்கவில்லை என்றால் அவர்கள் கோபித்துக் கொள்வதாகவும் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

சந்திப்புகள்
கொரோனா பரபரப்புக்கு மத்தியில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டன. அதிலும் குறிப்பாக திமுகவும், அதிமுகவும் மாவட்டந்தோறும் ஆலோசனை கூட்டங்கள், நிர்வாகிகள் சந்திப்புகள் என முழு வீச்சில் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை அமைத்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் நிர்வாகிகளால் தொண்டர்களிடம் நெருக்கம் பாராட்டாமல் இருக்க முடியாது.

சுவாரஸ்ய பேச்சு
அந்த வகையில் தொண்டர்களுக்கு கை கொடுப்பது பற்றி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியிருப்பது சுவாரஸ்யமானது. மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கொரோனா தொற்று பரவுவதால் ஒருவருக்கு ஒருவர் பக்கத்தில் அமரவேண்டாம் எனக் கூறினால், தொண்டர்கள் அதை கேட்பதேயில்லை என்றும் அப்படித்தான் சேர்ந்து உட்காருவோம் எங்களை பிரிக்க பார்க்காதீர்கள் என தன்னிடம் கூறுவதாகவும் கவலை தெரிவித்தார்.

ஓட்டு போய்விடும்
மேலும், சமூக இடைவெளியை பின்பற்றி தள்ளி பேசுமாறு கூறினால் தொண்டன் கோபித்துக் கொள்கிறான் என்றும் இதனால் கொரோனாவால் தனது உயிர் போனாலும் பரவாயில்லை கட்சிக்கு கிடைக்கக்கூடிய ஓட்டு போய்விடக் கூடாது என்பதற்காக கை கொடுத்து பேச வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். கை கொடுக்கத் தயங்கும் நீ எங்களுக்கு எப்படி வாழ்க்கை கொடுப்பாய் என சில தொண்டர்கள் உரிமையுடன் தன்னிடம் கேட்பதாகவும் கூறினார்.

பிரிக்க முடியாது
தொண்டர்களிடம் புரிய வைக்க முடியாததால் வேறு வழியின்றி கை கொடுத்து பேசி அவர்களை அனுப்பி வைக்க வேண்டியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் உதயகுமார், சமூக இடைவெளியை பற்றி அறியாமை காரணமாக இவ்வாறு பேசுவதாக வேதனைத் தெரிவித்துள்ளார்.
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கும் ராயபுரம் மனோ? எடப்பாடி பக்கா பிளான்! -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications