குடிமகன்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக டாஸ்மாக் திறப்பு... அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்
மதுரை: குடிமகன்களும், பொருளாதாரமும் பாதிக்கக்கூடாது என்பதற்காக டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் திறக்கப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகளை திறக்க திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அமைச்சர் இந்த விளக்கத்தை கொடுத்துள்ளார். தமிழகத்தில் மே 7-ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒரு நபருக்கும் மற்றொரு நபருக்கும் 6 அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும், ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்பன போன்ற நிபந்தனைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.

ஆனாலும் இதனை ஏற்க மறுக்கும் எதிர்க்கட்சிகள் டாஸ்மாக் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என நேற்று முதல் அறிக்கைகள் வாயிலாக வலியுறுத்தி வருகின்றன. இன்று திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்த அறிக்கையில் கூட, டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு ஊரடங்கு என்றால் அதற்குரிய உண்மையான பொருள் என்ன என்பதை அரசு விளக்க வேண்டும் என கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று மதுரையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கான காரணம் குறித்து தெரிவித்தார். எல்லோரும் கடையை திறந்த பின்பு நாம் மட்டும் திறக்காமல் இருக்க முடியாது என்றும், குடிமகன்களும், பொருளாதாரமும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே டாஸ்மாக்கை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்ததாக கூறினார்.
மேலும், இது மனமுவந்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும், கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும், வெளிமாநிலங்களுக்கு சென்று மதுவாங்குவதை தடுக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என விளக்கம் கொடுத்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications