விஜயகாந்த் மதுரைக்காரர்.. அரசியல் சூழ்ச்சி தெரிஞ்சவர்.. என்ன நடக்கும்னு பாருங்க.. அமைச்சர் உதயகுமார்
Recommended Video

மதுரை: விஜயகாந்த் அரசியல் சூழ்ச்சி தெரிந்தவர், நல்ல முடிவைத்தான் எடுப்பார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிதாக ரூ.5 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படுகிறது. ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கட்டிடத்திற்கான பணியினை பூமி பூஜை செய்து அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் தொடக்கி துவக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார் கூறியதாவது: திமுக கூட்டணி என்பது ஜீரோ. ஜீரோவுடன் எத்தனை ஜீரோ சேர்ந்தாலும் ஜீரோதான். அதிமுக அமைத்துள்ள கூட்டணி ராஜ்ய கூட்டணி. இன்னும் சில தோழமை கட்சிகள் அதிமுக கூட்டணியில் விரைவில் இணைய உள்ளனர்.

விஜயகாந்தின் அரசியல்
திமுக, தேமுதிக கூட்டணி தண்ணீரும், எண்ணெயும் போல ஒட்டவே ஒட்டாது. விஜயகாந்த் மதுரைக்காரர்... அரசியல் சூழ்ச்சி தெரிந்தவர், நல்ல முடிவைத்தான் எடுப்பார்.

ஸ்டாலினுக்கு சோகம்
திமுக கூட்டணியில் சோகம், விரக்தி, நிலவுகிறது. ஸ்டாலின் வாய்ப்பை நழுவ விட்டுவிட்டார் என்ற தொண்டர்கள் மத்தியில் சோகம் தெரிகிறது.

வேட்பாளர்களே இல்லை
ஏன் தேர்தலை சந்திக்கிறோம் என்ற வேதனை ஸ்டாலின் முகத்தில் தெரிகிறது. அதிமுகவை எதிர்க்க அமமுக களத்தில் இருக்கிறார்களா என்பதே தெரிய வில்லை.

கூட்டணிக்கு ஆளில்லை
டிடிவி தினகரன் போட்டியிட வேட்பாளர் இல்லாமல் தேடி கொண்டு இருக்கிறார். அங்கிகாரமில்லாத கட்சி என்பதால் அவருடன் யாரும் கூட்டணி வைக்கவும் முன்வரவில்லை என்று கூறினார்.












Click it and Unblock the Notifications