இதான் ஹைலைடே! கருணாநிதியே உயிரோடு வந்தமாதிரி.. பேசி நெகிழ்ந்த ஸ்டாலின் -மதுரை கலைஞர் நூலகத்தில் வாவ்
மதுரை: இன்று திறக்கப்பட்டு உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில், மறைந்த முதலமைச்சர் கருணாநிதியுடன் அமர்ந்து பேசுவதை போன்று அமைக்கப்பட்டு உள்ள தொழில்நுட்பம் அனைவரையும் வியப்படைய செய்து உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்த பிறகு மதுரையில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி பெயரில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக மதுரையில் ரூ.206 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தில் நூலகம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

துரிதமாக நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு நூலகம் என இதற்கு பெயர் வைக்கப்பட்டு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 17 ஆம் தேதி இந்த நூலகம் திறந்து வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
அதை தொடர்ந்து இன்று மதுரை வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாலை 5 மணியளவில் புதிய நூலகத்தை திறந்து வைத்தார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு, அமைச்சர்கள், எவ வேலு, பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதேபோல், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும் பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் ஐ லியோனி, பிரபல தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். அதேபோல் கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு முன் வைக்கப்பட்டு இருக்கும் கருணாநிதியின் சிலையையும் முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள சிறுவர்களுக்கான பகுதியில் இருந்து சிறுவர்களிடம் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்துரையாடினார். உலகின் முன்னணி நூலகங்களுக்கே சவால் விடும் வகையில் பலதுறைகளை சேர்ந்த லட்சக்கணக்கான நூல்களை கொண்ட மிக பிரமாண்டமான இந்த நூலகத்தில் கூடுதலாக பல்வேறு வசதிகள் நவீன தொழில்நுட்பத்துடன் ஏற்படுத்தபடுத்தப்பட்டு உள்ளன.
அதில் குறிப்பாக மறைந்த முதலமைச்சர் கருணாநிதியுடன் அமர்ந்து நேரில் தத்ரூபமாக பேசும் வகையிலான புதிய தொழில்நுட்பம் அங்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் அமர்ந்து கருணாநிதியுடன் அமர்ந்து பேசி நெகிழந்தனர்.
அங்குள்ள சோபாவில் அமர்வதன் மூலம், அதற்கு அருகே உள்ள தொலைக்காட்சியில் கருணாநிதியுடன் அமர்ந்து பேசுவதை போல் இருக்கும். அதில் கருணாநிதி கலை அசைத்து சகஜமாக அமர்ந்து பேசுவதைபோல் உள்ளது. குறிப்பாக துரைமுருகன் இயல்பாக கை நீட்டின் கருணாநிதியுடன் சிரித்துப்பேசி மகிழ்ந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரை நெகிழ வைத்து இருக்கிறது.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications