இதான் ஹைலைடே! கருணாநிதியே உயிரோடு வந்தமாதிரி.. பேசி நெகிழ்ந்த ஸ்டாலின் -மதுரை கலைஞர் நூலகத்தில் வாவ்
மதுரை: இன்று திறக்கப்பட்டு உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில், மறைந்த முதலமைச்சர் கருணாநிதியுடன் அமர்ந்து பேசுவதை போன்று அமைக்கப்பட்டு உள்ள தொழில்நுட்பம் அனைவரையும் வியப்படைய செய்து உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்த பிறகு மதுரையில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி பெயரில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக மதுரையில் ரூ.206 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தில் நூலகம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

துரிதமாக நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு நூலகம் என இதற்கு பெயர் வைக்கப்பட்டு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 17 ஆம் தேதி இந்த நூலகம் திறந்து வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
அதை தொடர்ந்து இன்று மதுரை வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாலை 5 மணியளவில் புதிய நூலகத்தை திறந்து வைத்தார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு, அமைச்சர்கள், எவ வேலு, பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதேபோல், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும் பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் ஐ லியோனி, பிரபல தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். அதேபோல் கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு முன் வைக்கப்பட்டு இருக்கும் கருணாநிதியின் சிலையையும் முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள சிறுவர்களுக்கான பகுதியில் இருந்து சிறுவர்களிடம் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்துரையாடினார். உலகின் முன்னணி நூலகங்களுக்கே சவால் விடும் வகையில் பலதுறைகளை சேர்ந்த லட்சக்கணக்கான நூல்களை கொண்ட மிக பிரமாண்டமான இந்த நூலகத்தில் கூடுதலாக பல்வேறு வசதிகள் நவீன தொழில்நுட்பத்துடன் ஏற்படுத்தபடுத்தப்பட்டு உள்ளன.
அதில் குறிப்பாக மறைந்த முதலமைச்சர் கருணாநிதியுடன் அமர்ந்து நேரில் தத்ரூபமாக பேசும் வகையிலான புதிய தொழில்நுட்பம் அங்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் அமர்ந்து கருணாநிதியுடன் அமர்ந்து பேசி நெகிழந்தனர்.
அங்குள்ள சோபாவில் அமர்வதன் மூலம், அதற்கு அருகே உள்ள தொலைக்காட்சியில் கருணாநிதியுடன் அமர்ந்து பேசுவதை போல் இருக்கும். அதில் கருணாநிதி கலை அசைத்து சகஜமாக அமர்ந்து பேசுவதைபோல் உள்ளது. குறிப்பாக துரைமுருகன் இயல்பாக கை நீட்டின் கருணாநிதியுடன் சிரித்துப்பேசி மகிழ்ந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரை நெகிழ வைத்து இருக்கிறது.
-
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications