இதான் ஹைலைடே! கருணாநிதியே உயிரோடு வந்தமாதிரி.. பேசி நெகிழ்ந்த ஸ்டாலின் -மதுரை கலைஞர் நூலகத்தில் வாவ்
மதுரை: இன்று திறக்கப்பட்டு உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில், மறைந்த முதலமைச்சர் கருணாநிதியுடன் அமர்ந்து பேசுவதை போன்று அமைக்கப்பட்டு உள்ள தொழில்நுட்பம் அனைவரையும் வியப்படைய செய்து உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்த பிறகு மதுரையில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி பெயரில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக மதுரையில் ரூ.206 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தில் நூலகம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

துரிதமாக நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு நூலகம் என இதற்கு பெயர் வைக்கப்பட்டு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 17 ஆம் தேதி இந்த நூலகம் திறந்து வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
அதை தொடர்ந்து இன்று மதுரை வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாலை 5 மணியளவில் புதிய நூலகத்தை திறந்து வைத்தார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு, அமைச்சர்கள், எவ வேலு, பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதேபோல், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும் பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் ஐ லியோனி, பிரபல தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். அதேபோல் கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு முன் வைக்கப்பட்டு இருக்கும் கருணாநிதியின் சிலையையும் முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள சிறுவர்களுக்கான பகுதியில் இருந்து சிறுவர்களிடம் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்துரையாடினார். உலகின் முன்னணி நூலகங்களுக்கே சவால் விடும் வகையில் பலதுறைகளை சேர்ந்த லட்சக்கணக்கான நூல்களை கொண்ட மிக பிரமாண்டமான இந்த நூலகத்தில் கூடுதலாக பல்வேறு வசதிகள் நவீன தொழில்நுட்பத்துடன் ஏற்படுத்தபடுத்தப்பட்டு உள்ளன.
அதில் குறிப்பாக மறைந்த முதலமைச்சர் கருணாநிதியுடன் அமர்ந்து நேரில் தத்ரூபமாக பேசும் வகையிலான புதிய தொழில்நுட்பம் அங்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் அமர்ந்து கருணாநிதியுடன் அமர்ந்து பேசி நெகிழந்தனர்.
அங்குள்ள சோபாவில் அமர்வதன் மூலம், அதற்கு அருகே உள்ள தொலைக்காட்சியில் கருணாநிதியுடன் அமர்ந்து பேசுவதை போல் இருக்கும். அதில் கருணாநிதி கலை அசைத்து சகஜமாக அமர்ந்து பேசுவதைபோல் உள்ளது. குறிப்பாக துரைமுருகன் இயல்பாக கை நீட்டின் கருணாநிதியுடன் சிரித்துப்பேசி மகிழ்ந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரை நெகிழ வைத்து இருக்கிறது.
-
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
மீஞ்சூரில் சூறையாடப்பட்ட மாணவி.. வாய் திறப்பாரா ஸ்டாலின்? உச்சகட்ட கோபத்தில் எடப்பாடி பழனிசாமி! -
Delimitation: பொருளாதாரம், நிதி ஆதாரத்தில் பெரிய ஓட்டை விழும்.. தென்னிந்திய மாநிலங்களுக்கு 'இரட்டை தண்டனையா'? -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
கடுகடு ராகுல்.. கண்டு கொள்ளாத ஸ்டாலின்! கரையேறுமா காங்கிரஸ்? தனி ரூட் எடுத்துப் பாயும் அறிவாலயம்! -
சேலத்தில் ஸ்டாலின், கமல்ஹாசன் முன்பே.. விஜய்யை பங்கமாக கலாய்த்த பிரேமலதா -
மாப்ள சிவசங்கர் தான்.. ஆனால் சட்டை செந்தில் பாலாஜியோடது! திமுகவின் போலி கூப்பன்! அன்புமணி அட்டாக்! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல்












Click it and Unblock the Notifications