3D தரை.. குழந்தையாகவே மாறிய ஸ்டாலின்! கால் வைத்தவுடன் கொடுத்த ரியாக்ஷன் - கலைஞர் நூலகத்தில் அசத்தல்
மதுரை: இன்று திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தில் இடம்பெற்று உள்ளா 3டி தரையில் கால் வைத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் பூரித்துப்போனார். என்ன அது?
தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சியமைத்த உடன், முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி பெயரில் மதுரையில் நூலகம் அமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மதுரை புதுநத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை கட்டிட வளாகத்தில் நூலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

ரூ.114 கோடி செலவில் நூலக கட்டிடம் கட்டப்பட்டு புத்தகம், உள்கட்டமைப்பு, அறைகலன்கள் என ரூ.218 கோடி மதிப்பீட்டில் ஒரே ஆண்டில் இந்த நூலகம் தயாரானது. இந்த கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி வைத்தார். 2 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 8 தளங்களை கொண்ட இந்த நூலக கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.
தமிழ், ஆங்கில மொழி நூல்கள், மத்திய, மாநில அரசு, வரலாறு, கணினி, தொழில்நுட்பம், அறிவியல், சட்டம், இலக்கியம், கலை, விண்வெளி, புவியியல், போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த புத்தகங்கள் இந்த நூலகத்தில் இடம்பெற இருக்கின்றன.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையிலான நூல்கள் வீட்டில் பயன்படுத்துவதற்காகவும் வழங்கப்பட இருக்கிறது. அதேபோல் இந்த நூலகம் குறிப்புதவி செய்வதற்காகவும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதில் கருணாநிதியின் படைப்புகளுக்காகவே ஒரு தனியான பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
அது தவிர ஆய்வாளர்களுக்காக ஒரு பிரிவு, அரிய நூல்களுக்காக ஒரு பிரிவு எனப் பல பிரிவுகள், தவிர போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காகவே ஒரு பிரிவு, பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு பிரிவு, குழந்தைகள் பயன்பாட்டுக்காக ஒரு பிரிவு, நாளிதழ்கள் மற்றும் வார, மாத இதழ்களைப் படிப்பதற்காக ஒரு பிரிவு என அமைக்கப்பட்டு உள்ளது.

குழந்தைகளை நூலகத்திற்கு வரவழைக்கும் முயற்சியாக பல்வேறு சிறப்பம்சங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதில் முக்கியமாக தமிழ் எழுத்துக்கள் வடிவிலான இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் திரை கொண்ட அரங்கமும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்தையும் கடந்து ஸ்டாலின் உட்பட அனைவரையும் வியக்க வைத்த ஒரு அம்சமும் உள்ளது.
அதுதான் 3டி தரை. மிண்ணும் ஒளியுடன் அமைக்கப்பட்டு உள்ள அந்த 3டி தரையில் கால் வைத்து மாணவ மாணவிகள் மகிழ்ந்தனர். அப்போது அதை பார்த்த முதலமைச்சர் முக ஸ்டாலின் அன்பில் மகேஷிடன் நானும் கால் வைக்கலாமா என்று கேட்டு கால் வைத்தார். உடனே 3டி தரையில் நகர்வதைபோல் இருந்ததை கண்டு முதலமைச்சர் ஸ்டாலின் பூரித்தார்.
-
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
மீஞ்சூரில் சூறையாடப்பட்ட மாணவி.. வாய் திறப்பாரா ஸ்டாலின்? உச்சகட்ட கோபத்தில் எடப்பாடி பழனிசாமி! -
Delimitation: பொருளாதாரம், நிதி ஆதாரத்தில் பெரிய ஓட்டை விழும்.. தென்னிந்திய மாநிலங்களுக்கு 'இரட்டை தண்டனையா'? -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
கடுகடு ராகுல்.. கண்டு கொள்ளாத ஸ்டாலின்! கரையேறுமா காங்கிரஸ்? தனி ரூட் எடுத்துப் பாயும் அறிவாலயம்! -
சேலத்தில் ஸ்டாலின், கமல்ஹாசன் முன்பே.. விஜய்யை பங்கமாக கலாய்த்த பிரேமலதா -
மாப்ள சிவசங்கர் தான்.. ஆனால் சட்டை செந்தில் பாலாஜியோடது! திமுகவின் போலி கூப்பன்! அன்புமணி அட்டாக்! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல்












Click it and Unblock the Notifications