நடிகை திருமணத்திற்கு வர பிரதமருக்கு நேரமிருக்கு.. கஜா புயல் பாதித்த தஞ்சைக்கு வர முடியலை.. டி.ஆர்
மதுரை : நடிகையின் திருமணத்திற்கு செல்லும் பிரதமருக்கு கஜா புயலால் பாதித்த தஞ்சைக்கு வர நேரமில்லை என்று பிரபல இயக்குநரும், லட்சிய திராவிட முன்னேற்ற கழக நிறுவனருமான டி.ஆர்.ராஜேந்தர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது கஜா புயல். டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமே பாதிக்கப்பட்டது. விவசாயம், பொருளாதாரம் என்று முற்றிலும் கையறு நிலையில் டெல்டா மாவட்ட மக்கள் தவித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த அமைச்சரை பொதுமக்கள் முற்றுகையிடுவதும், விரட்டி அடிக்கும் சம்பவங்களும் அரங்கேறின. உலக தமிழ் மக்கள் இன்றளவும் தம்மால் இயன்றதை செய்து வருகின்றனர். அரசு தரப்புடன் இணைந்து பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் நிவாரண பணிகளில் கைகோர்த்துள்ளன.
இந்நிலையில் நடிகையின் திருமணத்திற்கு செல்லும் பிரதமர் கஜா புயலால் பாதித்த தஞ்சைக்கு வர நேரமில்லை என்று பிரபல இயக்குநரும், லட்சிய திராவிட முன்னேற்ற கழக நிறுவனருமான டி.ஆர்.ராஜேந்தர் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், லட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக நாளை கீழக்கரையில் நடைபெறவுள்ள திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். ஸ்டாலின் என்னை கலைஞர் சிலை திறப்பு விழாவிற்கு அழைக்கவில்லை. அதை நான் மறந்து விட்டேன்.. அதை எனக்கு மறக்க தெரியும்.
இரட்டை இலையை வைத்து அரசியல் செய்கிறார்களா அல்லது இரட்டை இலையை இயக்குகிறார்களா என்பது தெரியவில்லை. தட்டிக் கேட்க கூடியவர்கள் பயப்படுகிறார்கள். கஜாபுயலினால் பல தென்னை மரங்கள் நாசமாகி போய்விட்டது.
தஞ்சை மாவட்டம் டெல்டா மாவட்டம் சோற்றுக்கும். ரொட்டிக்கும் தற்போது சிரமப்படுகிறது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் ஆகிய திட்டங்களை கொண்டு மத்திய அரசு டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க முயற்சிக்கிறது.
மத்திய அரசு ஏன் பாரமுகம் காட்டுகிறது? கஜாபுயலுக்கு நிவாரணம் வழங்க ஏன் தமிழகத்தை புறக்கணித்து வருகிறீர்கள்? தற்போது மோடி ஓட்டு கேட்டு ஜனவரியில் தமிழ்நாடு வருகிறார். நடிகைகளின் திருமணத்திற்கு செல்லக் கூடிய பிரதமர் ஏன் தமிழகத்திற்க்கு வர மறுக்கிறீர்கள்?
அதிமுக தலைமை சரியில்லாமல் இருந்தும் எடப்பாடி அரசு இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி உள்ளே வெளியே என வாழ்த்து வருகிறது. கஜாபுயலுக்கு நிவாரான நிதியை மத்திய அரசிடம் கேட்டு வாங்க மறுக்கிறது எதிர்கட்சி.
மக்கள்கள் போராடும் நிலையில் இல்லை..போராடினால் அரசுக்கு புரியும். கமலஹாசன் தற்போது அரசியலுக்கு வந்துள்ளார். அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்போம். அரசியலுக்கு வராதா ரஜினிக்கு பற்றி பதில் சொல்ல வேண்டியதில்லை என்று தெரிவித்தார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications