பாஜக, கம்யூனிஸ்ட் தவிரப் பிற கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன… நீதிபதிகள் வருத்தம்
மதுரை: பெரும்பாலான அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.
வேட்புமனுக்கள் குறைபாடு தொடர்பாகத் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தியன், என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இவ்வாறு கூறினர்.
இதுதொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள்,
இழுத்தடித்த காங்.. கடுப்பில் காஷ்மீரின் 6 தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவித்த பரூக் அப்துல்லா
பெரும்பாலான அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாகத் தெரிவித்தனர். பாஜக, கம்யூனிஸ்ட் தவிரப் பிற கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாகக் கூறினர்.
முன்னதாக, வேட்பாளர்கள் மனுத் தாக்கலின்போது தேர்தல் வாக்குறுதியைப் பிரமாண பத்திரமாகத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்ற நோட்டீஸ்களுக்கு பதில் அளிக்காத அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து செய்யும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அபராதத்தை ரத்து செய்ய நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.