வாக்கு கேட்டு பள்ளிவாசல் சென்ற அமைச்சர், அதிமுக எம்எல்ஏவுக்கு கடும் எதிர்ப்பு.. மதுரையில் பரபரப்பு
Recommended Video
மதுரை: வாக்கு கேட்டு பள்ளிவாசலுக்கு சென்ற அதிமுக அமைச்சர், எம்.எல்.ஏ வுக்கு எதிர்ப்பு . பள்ளிவாசல் உள்ளே செல்லவிடாமல் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யனுக்கு ஆதரவு கேட்டு மதுரை கோ.புதூர் பகுதியில் உள்ள ஜமாத் பள்ளி வாசலுக்கு சென்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்ட அதிமுகவினருக்கு பள்ளிவாசலில் தொழுகையில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளே வரக்கூடாது என கூறியுள்ளனர்.
பள்ளிவாசலுக்கு உள்ளே அனுமதிக்காமல் அதிமுகவினர்க்கு எதிராக கோஷத்தை எழுப்பி அமைச்சரையும், எம்எல்ஏவையும் விரட்டியதால் புதூர் பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.
நாட்டுக்கு இதுதான் கடைசி தேர்தல்.. ஆ.ராசா எச்சரிக்கை
நாடு முழுக்க மாட்டு இறைச்சிக்கு எதிராக கடந்த காலங்களில் பெரும் வன்முறைகள் நடந்தன. இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் இந்த காரணத்திற்காக கொலையும் செய்யப்பட்டனர். ஆனால் மத்தியிலுள்ள பாஜக அரசு இதை கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தமிழகத்தில் இதுபோன்ற மோதல்கள் இல்லை என்றாலும், பாஜகவோடு கூட்டணி வைத்துக்கொண்டுள்ள அதிமுக எப்படி பள்ளிவாசலுக்கு வரலாம் என்று கேள்வி எழுப்புகிறார்கள் அப்பகுதி மக்கள்.