நாடார் மகாஜன சங்கத் தேர்தல் விறுவிறு! கரிக்கோல் ராஜ் Vs என்.ஆர்.தனபாலன்! யார் கை ஓங்கும்?
மதுரை: ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் மேற்பார்வையில் நாடார் மகாஜன சங்கத் தேர்தல் மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
62,000க்கும் மேற்பட்டோர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என்பதால் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
நாடார் மகாஜன சங்கத் தலைவர் பதவிக்கு கரிக்கோல் ராஜ், என்.ஆர்.தனபாலன், உள்ளிட்ட 3 பேர் போட்டியில் இருப்பது கவனிக்கத்தக்கது.

நாடார் மகாஜன சங்கம்
தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டப்படி பதிவு செய்யப்பட்டு பல்லாண்டு காலமாக நாடார் மகாஜன சங்கம் இயங்கி வருகிறது. நாடார் சமுதாய மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு அறப்பணிகளை செய்து வரும் இச்சங்கத்திற்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. நாடார் மகாஜன சங்கத் தலைவர், துணைத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவியிடங்களுக்கு மும்முனை போட்டி நிலவுகிறது. இதனிடையே தேர்தல் நடைபெற்று வரும் மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

3 பேர் போட்டி
இந்த தேர்தல் ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் மேற்பார்வையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 62,129 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என்பதால் காலை 8 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்துச் செல்கின்றனர். மாலை 5 மணியோடு தேர்தல் நிறைவு பெறும் நிலையில் இன்று இரவே முடிவுகளை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாடார் மகாஜன சங்கத் தலைவர் பதவிக்கு கரிக்கோல் ராஜ், என்.ஆர்.தனபாலன், உள்ளிட்ட 3 பேர் போட்டியில் இருப்பது கவனிக்கத்தக்கது.

யார் கை ஓங்கும்?
கரிக்கோல் ராஜும், என்.ஆர்.தனபாலனும், நாடார் சமுதாய அமைப்புகள், மற்றும் சமுதாய மக்களிடம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆதரவு திரட்டி வந்தனர். இதனிடையே நாடார் சமுதாய மக்களின் தேர்வு யாராக இருக்கும் என்பது இன்றிரவு தெரிந்துவிடும். நாடார் மகாஜன சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட பிறகு மாவட்ட அளவிலும் நிர்வாகிகள் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல துறைகளில்
நாடார் சமுதாயத்தை சேர்ந்த பலரும் தொழில், கல்வி, அரசியல், மருத்துவம், என பல துறைகளில் உலகளவில் கொடிகட்டி பறந்து வருகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. இதனிடையே இந்த தேர்தலின் முடிவு அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications