ஆனந்தன், நந்தினியை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்த திட்டம்.. தங்கை நிரஞ்சனாவும் கைது
Recommended Video

மதுரை: தந்தை ஆனந்தன், நந்தினியை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த அவரது தங்கை நிரஞ்சனாவும் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருபவர் வழக்கறிஞர் நந்தினி. இவர் கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே தனது தந்தை ஆனந்தனுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் மீது திருப்பத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த ஜூன் 27-ஆம் தேதி நடைபெற்றது.
அப்போது டாஸ்மாக் மூலம் போதைப் பொருள் விற்பது குற்றமில்லையா என நீதிபதியிடம் நந்தினி வாதாடினார். இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே வழக்கறிஞர் நந்தினிக்கு ஜூலை 5-ஆம் தேதி திருமணம் நடத்துவதாக இருந்த நிலையில் அவர் தற்போது வரை சிறையில் உள்ளார்.
நீதிமன்றம் குறித்து எத்தனை பேர் தரக்குறைவாக பேசிவிட்டு வெளியே இருக்கும் நிலையில் நந்தினியையும் தந்தை ஆனந்தனையும் மட்டும் கைது செய்தது ஏன் என கட்சித் தலைவர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் தனது சகோதரியையும் தந்தையையும் விடுவிக்கக் கோரி நந்தினியின் தங்கையும் சட்டக் கல்லூரி மாணவியுமான நிரஞ்சனா நீதிமன்றம் முன் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தார்.
போராட்டத்திற்கு அவர் தயாராகி கொண்டிருந்த நிலையில் அவரை அவரது வீட்டுக்கே சென்று போலீஸார் கைது செய்தனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications