நியோமேக்ஸ் மோசடி.. குவியும் புகார்களுக்கு இடையே மேலும் 2 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!
மதுரை: நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி தொடர்பாக பல்வேறு மாவட்ட மக்கள் ஆதாரங்களுடன் புகார் அளித்து வரும் நிலையில், இந்த வழக்கில் மேலும் 2 பேருக்கு ஜாமின் வழங்கி மதுரை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை தலைமையிடமாக கொண்டு நியோமேக்ஸ் பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்துக்கு பாளையங்கோட்டை, கோவில்பட்டி, திருச்சி, தஞ்சை என பல மாவட்டங்களில் அலுவலகங்கள் செயல்பட்டன. இந்த நிதி நிறுவனத்தின் இயக்குநர்களாக வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், மாதம் 12% முதல் 30% வரை வட்டி தருவதாகவும், இரண்டரை முதல் 3 ஆண்டுகளில் முதலீடு செய்த பணம் இரட்டிப்பாக தரப்படும் எனக் ஆசை வார்த்தை கூறி முதலீடுகளை ஈர்த்தனர். இதை நம்பி பலர் பல கோடிக்கு முதலீடுகளை செய்துள்ளனர். ஆனால் கூறியபடி யாருக்கும் வட்டி தராமல் ஏமாற்றி உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.
புகார்களின் அடிப்படையில் 17 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் 10 கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்களான பாலசுப்ரமணியன், பழனிசாமி, அசோக் மேத்தா, சார்லஸ் கிளோமேக்ஸ் , தியாகராஜன், கமலகண்ணன், நாராயணசாமி, மணிவண்ணன் ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
நியோமேக்ஸ் இயக்குநர்களான சைமன் ராஜா, கபில் ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என பொருளாதாரம் குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதி, கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். தினமும் காலை 10 மணிக்கு பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், தலா ஒரு லட்ச ரூபாய் பிணைத்தொகை செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே, நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள் புகார் அளிப்பதற்காக பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி முன்னிலையில் மதுரையில் சிறப்பு முகாம் நடைபெற்று வந்தது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் வந்து புகார் அளித்தனர்.
இந்நிலையில், நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மதுரை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றம், நியோமேக்ஸ் நிறுவன நிர்வாகிகள் இசக்கிமுத்து, சகாயராஜ் ஆகிய 2 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications