"நான்தான் மதுரையின் புதிய ஆதீனம்.. பதவி ஏற்றுவிட்டேன்".. புயலை கிளப்பும் நித்யானந்தா.. பின்னணி!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையின் 293வது ஆதீனமாக தான் பதவி ஏற்றுக்கொண்டதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். இவரின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில போலீசார் மூலம் நித்யானந்தா தேடப்பட்டு வருகிறார். அடுக்கடுக்காக பல்வேறு புகார்கள் இவர் மீது வைக்கப்பட்டுள்ளதால் இவரை இந்தியா கொண்டு வரும் முடிவிலும் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி உள்ளதாக இவர் அறிவித்துள்ளார்.

இதற்கான தனி நாணயம், கொடி உள்ளிட்டவற்றை கூட இவர் வெளியிட்டு இருந்தார். அதோடு கைலாசாவில் இருந்து ஆன்மீக வீடியோக்களையும் கூட இவர் வெளியிட்டு வருகிறார். இந்தியாவில் இருந்து இவர் தப்பி ஓடிய நிலையில் இவரின் சரியான இருப்பிடம் இன்னும் வெளியே வரவில்லை. இவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து இன்னும் முழுமையான விவரம் வெளியாகவில்லை.

தேடல்

தேடல்

பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதால். இவரை இந்தியா கொண்டு வர வேண்டும் என்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது மதுரையின் 293வது ஆதீனமாக பதவி ஏற்றுக்கொண்டதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். மதுரை ஆதீனம் மடத்தில் 292-வது பீடாதிபதி அருணகிரிநாதர் கடந்த 13-ந்தேதி உயிரிழந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் 3 நாட்களுக்கு முன் பலியானார்.

தேர்வு

தேர்வு

கடந்த 40 வருடமாக இவர் ஆதீனமாக இருந்தார் இதையடுத்து விதிப்படி அவர் இளைய பீடாதிபதியாக அறிவித்த நபர்தான் புதிய ஆதீனமாக நியமிக்கப்பட வேண்டும். அதன்படி 293வது மடாதிபதி ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பதவியேற்றுக்கொண்டார். இவர் அருணகிரிநாதர் மூலம் இளைய பீடாதிபதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய ஆதீனமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஆனால்

ஆனால்

ஆனால் நித்யானந்தா தன்னை ஆதீனம் என்று கூறிக் கொண்டு 293-வது ஆதீனமாக தான் பதவி ஏற்று கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 2012-ம் ஆண்டு நித்யானந்தாவை மதுரை ஆதீனத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார். ஆனால் இந்த அறிவிப்பு விமர்சனங்களை சந்தித்தது. இது சர்ச்சையில் முடிந்தது. இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடும் ஏற்பட்டது. இதையடுத்து இந்த அறிவிப்பை அருணகிரிநாதர் திரும்ப பெற்றார்.

இல்லை

இல்லை

இதனால் விதிப்படி இனி நித்யானந்தா இளைய பீடாதிபதி கிடையாது என்று அருணகிரிதர் முன்பு தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது அவரின் மறைவையொட்டி தான்தான் புதிய ஆதீனம் என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார். மேலும் இனி தன்னுடைய பெயர் ஜெகத்குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் என்றும் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.

கைலாசா

கைலாசா

ஏற்கனவே கைலாஸா நாட்டின் அதிபராக இவர் தன்னை அறிவித்து உள்ளார். தனது நாட்டிற்கு என்று தனி சட்ட திட்டங்களை இவர் அறிவித்து அங்கு ஆட்சி நடத்தி வருகிறார். இவருக்கு எதிராக இந்தியாவில் சில இடங்களில் புகார்கள் உள்ள நிலையில் தன்னை புதிய மதுரை ஆதீனமாகவும் இவர் தன்னை அறிவித்துக்கொண்டு இருக்கிறார். முக்கியமாக மதுரைக்கு வராமலே ஆன்லைன் மூலம் பதவி ஏற்றுக்கொண்டதாக இவர் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+