நீர்நிலையை ஆக்கிரமித்தவர்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது.. மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி!
நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கூடாது, அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை: நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கூடாது, அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீர்நிலைகள் தமிழகம் முழுக்க பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது. பல ஏரிகள், குளங்கள் இதனால் காணாமல் போய் இருக்கிறது. இந்த நிலையில் இதற்கு எதிராக பல இடங்களில் வழக்குகள் பதியபப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கையகப்படுத்த கோரியும் மதுரை ஹைகோர்ட் கிளையில் ரமேஷ் என்பவர் வழக்கு தொடுத்தார். அதில் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதில், நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கூடாது, அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவர்களுக்கு வாக்குரிமை அளிக்க கூடாது. மாவட்ட ஆட்சியர்கள் இதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதுகுறித்து சுற்றறிக்கை அளிக்க வேண்டும்.
நீர்நிலை ஆக்கிரமிப்பு வரைப்படத்தை மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக உருவாக்க வேண்டும். அதை மாவட்ட ஆட்சியர்கள் தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். பிப்ரவரி 8ம் தேதிக்குள் இந்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
அதன்பின் தேர்தல் ஆணையம் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிப்ரவரி 11க்குள் இதை செயல்படுத்த வேண்டும். பிப்ரவரி 13ம் தேதி இதன் மீதான நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். அதில் இருக்கும் நிறுவனங்களை நிறுவனங்களாக கருத கூடாது. அதன் வரிகளை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications