அதிமுக மாநாடு! புளி சாதம் எப்படியிருந்தது? போகிற போக்கில் பங்கமாய் கலாய்த்த ஓ.பன்னீர்செல்வம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாடு எப்படியிருந்தது என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, அதில் போட்ட புளியோதரை எப்படி இருந்தது என எதிர்கேள்வி கேட்டார் ஓ.பன்னீர்செல்வம்.

அதற்கு புளியோதரை நல்லாயில்லை என கூட்டத்தில் ஒருவர் கூற, ''ம்ம்.. அது போல் தான் மாநாடும்'' என பங்கமாய் கலாய்த்துவிட்டு விமான நிலையத்திற்குள் சென்றார். புளியோதரை சாப்பிட முடியாதபடி வாடை எடுத்து குப்பையில் கொட்டப்பட்டதை போல் தான் அதிமுக மாநாடு என்பதை அவர் இப்படி நையாண்டி செய்திருக்கிறார்.

O.Panneerselvam compared the AIADMK conference to spoiled tamarind rice

இதனிடையே தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லவுள்ளீர்களா என்ற கேள்விக்கு ஆம், இல்லை என்று பதில் சொல்லாமல் ஓ.பன்னிர்செல்வம் நழுவிக்கொண்டார். அதிமுக பொதுக்குழு தீர்ப்பு வந்த பிறகு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்ததால், அது பற்றி ஓ.பன்னீர்செல்வம் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்னும் கொஞ்ச நேரம் இங்கே நின்றால் அதிமுக பொதுக்குழு தீர்ப்பை பற்றி கேள்வி எழுப்பிவிடுவார்களோ என்ற ஐயத்தில் அவசர அவசரமாக விமான நிலையத்திற்குள் செல்வதிலேயே குறியாக இருந்தார். செய்தியாளர்கள் கேள்விக்கு நின்று பதில் சொல்லவில்லை.

மதுரை அதிமுக மாநாட்டை புளியோதரையுடன் ஒப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் கலாய்த்துள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதற்கு நாளை பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+