நீச்சல்.. மண் குத்துதல்.. பலே பயிற்சிகளில் காளைகள்.. ஜல்லிக்கட்டுக்கு ரெடியாகும் தமிழகம்
மதுரை: அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகளுக்கு தயாராகும் காளைகளுக்கு கிராமத்தினர் பல்வேறு பயிற்சிகள் அளித்து வருகின்றனர்.
Recommended Video
உலகப்புகழ் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த நிலையில் அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அய்யூர் கிராம கரந்தமலை, செல்லாயி அம்மன், கோவில் கிராமத்து மாடுகளுக்கு நீச்சல் பயிற்சி, மண் குத்தும் பயிற்சியை கிராம இளைஞர்கள் அளித்து வருகின்றனர்.
மேலும் காளைகளுக்கு நேரத்திற்கு உணவு, தண்ணீர், தீவனம் போன்றவை வைக்கப்பட்டு பராமரித்து வருகின்றனர். இந்த காளைகள் பல்வேறு ஜல்லிக்கட்டுகளில் பங்குபெற்று பல பரிசுகளை பெற்று கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதியளித்து அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.