கார்த்திகை தீபம் என்ன ராமரவிக்குமாரின் வீட்டு தீபமா? திருப்பரங்குன்றம் கோயில் தரப்பு காரசார வாதம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் மீது கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கில், கார்த்திகை தீபத்தை வீட்டு தீபம் போல் மனுதாரர் ராமரவிக்குமார் நினைக்கிறார் என கோயில் நிர்வாகம் தனது வாதத்தை முன் வைத்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து கோயில் நிர்வாகமும் மாவட்ட ஆட்சியரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தியது.

thirupparankundram madurai

அப்போது கோயில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயிலின் பழக்கவழக்கங்களை மாற்ற தனிநபர் கோரியுள்ளார். அது அவருக்கான உரிமை அல்ல. கார்த்திகை தீபத்தன்று மலை மீது தீபம் ஏற்றுவது வேறு, வீட்டில் தீபம் ஏற்றுவது வேறு.

கார்த்திகை தீபத்தை வீட்டில் தீபம் ஏற்றுவது போல் கருதுகிறார் மனுதாரர். தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோயிலை கட்டாயப்படுத்த முடியாது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பரங்குன்றத்தில் தீபமேற்றும் நடைமுறை ஆகமவிதிபடி நடக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட ஆகமவிதிகளை மீறி எதையும் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+