பிரதமர் மோடி வருகை: மதுரை விமான நிலையம் முதல் காந்தி கிராமம் வரை சாலை மார்க்கமாக போலீஸ் ஒத்திகை!
மதுரை: பிரதமர் மோடி நாளை திண்டுக்கல் காந்தி கிராமம் வருகை தருகிறார். இதனையொட்டி மதுரை விமான நிலையம் முதல் காந்தி கிராமம் வரை சாலை மார்க்கமாக போலீசார் இன்று ஒத்திகை அணிவகுப்பு நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் 36 ஆவது பட்டமளிப்பு விழா நாளை மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தமிழக ஆளுநர் ரவி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர், இந்த விழாவிற்காக 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டிஜிபி ஆய்வு
இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இன்று விழா நடைபெறும் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தார். பின்னர் பாதுகாப்பு குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கத்திற்கு சென்று பார்வையிட்டார்.

ஒத்திகை நிகழ்ச்சி
பிரதமர் நரேந்திர மோடி மதுரை விமான நிலையத்தில் இருந்து விழா நடைபெறும் காந்தி கிராம பல்கலைக்கழகத்திற்கு கார் மூலம் வருகைக்கான ஒத்திகை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச்சாலையில் பிற்பகல் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது.

மதுரை- காந்தி கிராமம் ஒத்திகை
இதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்திலிருந்து மாலை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. எட்டு கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து வந்தன. அணிவகுத்து வந்த கார்கள் விழா நடைபெறும் ஆடிட்டோரியம் வரை சென்றது. இதனைத் தொடர்ந்து மீண்டும் வாகனங்கள் திரும்பி மதுரை விமான நிலையத்திற்கு சென்றது.

ஹெலிகாப்டர் ஒத்திகை
முன்னதாக பிரதமர் மோடி, மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக காந்தி கிராமம் வருகை தர திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக ஹெலிபேட் அமைக்கப்பட்டது. இந்த ஹெலிபேடில் ஹெலிகாப்டர்கள் தரையிறங்கி சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் கனமழை எச்சரிக்கையால் வானிலை மோசமாக இருந்தால் சாலை மார்க்கமாக பிரதமர் மோடி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. ஆகையால் இந்த சாலை மார்க்க ஒத்திகை இன்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications