டியூட்டியில் இருந்து அவசர அனுமதி கேட்டு! விஜய்யை பார்க்க போன போலீஸ் கான்ஸ்டபிள்! பாய்ந்தது நடவடிக்கை
மதுரை: மதுரைக்கு வந்து தவெக தலைவர் விஜய்யை பணி நேரத்தின் போது வரவேற்ற காவலர் கதிரவன் மார்க்ஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சீருடையின்றி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை வரவேற்ற வீடியோ இணையத்தில் பரவிய நிலையில் அவர் மீது மதுரை மாவட்ட காவல் ஆணையர் லோகநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம் தெப்பக்குளம் குற்றப்பிரிவு காவலராக பணியாற்றி வருபவர் கதிரவன் மார்க்ஸ். சித்திரை திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக இவர் விளக்குத்தூண் காவல் நிலையத்தில் மாற்றுப் பணியில் இருந்தார். நேற்று முன் தினம் மார்க்ஸ் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் பணி செய்து வந்தார்.

இந்த நிலையில் தான் கொடைக்கானலில் சூட்டிங்கிற்கு பங்கேற்க சென்ற விஜய்யை காவலர் மார்க்ஸ் கட்சிக் கொடியுடன் வரவேற்று உள்ளார். அதாவது நேற்று முன் தினம் பணியில் ஈடுபட்டிருந்த மார்க்ஸ் அவசர வேலைக்காக வெளியில் செல்கிறேன் என்று சொல்லி பெர்மிஷன் வாங்கியிருக்கிறார். பெர்மிஷன் வாங்கிவிட்டு மதுரை விமான நிலையம் வந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை வரவேற்றுள்ளார்.
அப்போது அவர் கட்சிக் கொடி, துண்டினை தோழில் அணிந்தபடி வரவேற்று இருக்கிறார். இந்த நிலையில் அவர் விஜய்யை வரவேற்கும் வீடியோவானது மதுரை மாவட்ட ஆணையர் லோகனாதன் கண்ணில் பட்டுள்ளது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications