மதுரை மத்திய தொகுதி.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு பின்னடைவு.. அதிர்ச்சி கொடுத்த சுந்தர்.சி!
மதுரை: மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து என்டிஏ கூட்டணி சார்பாக இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி களமிறங்கி இருக்கிறார். பிரச்சாரத்தின் போதே இந்த இரு தரப்பும் வார்த்தை மோதலில் ஈடுபட்ட சூழலில், வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. இதில் 85.10% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தமிழ்நாடு முழுவதும் 4.87 கோடி பேர் வாக்களித்திருக்கின்றனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு முழுக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நட்சத்திர தொகுதியாக மாறி இருக்கிறது மதுரை மத்திய தொகுதி. ஏனென்றால் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து என்டிஏ கூட்டணி சார்பாக இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி களமிறக்கப்பட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது சுந்தர்.சி-யின் வார்த்தை விளையாட்டில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சிக்கினார்.
இதனால் மதுரை மத்திய தொகுதி களம் சூடாகியது. இன்னும் சொல்லப் போனால், நடிகை குஷ்புவை விடவும் சுந்தர்.சி-யின் நிதானமான பேச்சு பலரையும் கவனிக்க வைத்தது. இந்த நிலையில் மதுரையில் மதுரை கல்லூரியில் மத்திய தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி இருக்கிறது. தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிவடைந்து, EVM இயந்திரம் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி சுந்தர்.சி முன்னிலையில் இருக்கிறார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பின்னடைவை சந்தித்துள்ளார்.












Click it and Unblock the Notifications