கொடியேறுனது தான் தாமதம்..மாமதுரையையே குளிர வைச்ச தாய் மீனாட்சி..! இனி நாளெல்லாம் கொண்டாட்டம் தானே..!
மதுரை : உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கொடியேற்ற நிகழ்வு இன்று காலை கோலாகலமாக நடைபெற்ற நிலையில் மதுரையின் நகர் பகுதியில் முழுவதும் சாரல் மழை பெய்தது. சித்திரை திருவிழா கொடியேற்றம் என்றால் மழை பெய்வது ஐதீகம் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும் கோவிலாகும்.

இந்த விழாக்களின் முக்கிய விழாவான சித்திரை திருவிழா இன்று காலை மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதி முன்பாக உள்ள கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சியுடன் வெகுவிமர்சையாக தொடங்கியது.
சித்திரை திருவிழா: மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்ககொடி மரத்தில் தர்ப்பை புற்களை வைத்து வெண்பட்டால் சுற்றப்பட்ட பிரமாண்டமான மாலை ஏற்றப்பட்டு மலர்கள் தூவி கொடிகம்பத்திற்கு பூஜிக்கப்பட்ட நீரினை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்ற விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, கோவில் தக்கார் ருக்மணி பழனிவேல்ராஜன், மற்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் மற்றும் அறங்காவல்குழு நிர்வாகிகள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மீனாட்சி அம்மன்: முன்னதாக கொடி மரத்தின் முன்பாக சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சிஅம்மன் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தனா். கொடியேற்றுத்துடன் தொடங்கிய சித்திரை திருவிழா இன்று தொடங்கி 12 நாட்கள் திருவிழாவாக நடைபெறவுள்ள சித்திரை திருவிழாவின் போது நாள்தோறும் காலை மற்றும் மாலைகளில் நான்கு மாசி வீதிகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளும் வீதி உலா நிகழ்வு நடைபெறவுள்ளது.

என்னென்ன நிகழ்ச்சிகள்: விழாவின் சிகர நிகழ்வாக வரும் 19ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், 21ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், 22ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து 23ம் தேதி இந்திரபூஜையுடன் விழா மீனாட்சியம்மன் கோவிலின் இந்த ஆண்டு சித்திரைத்திருவிழா நிறைவடையவுள்ளது. இதன் தொடர்ச்சியாக மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிராவின் சிகர நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு வரும் 23ம் தேதி அதிகாலை நடைபெறவுள்ளது.
குளிர்வித்த மழை: இந்நிலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கொடியேற்ற நிகழ்வு இன்று காலை கோலாகலமாக நடைபெற்ற நிலையில் மதுரையின் நகர் பகுதியில் முழுவதும் சாரல் மழை பெய்தது. சித்திரை திருவிழா கொடியேற்றம் என்றால் மழை பெய்வது ஐதீகம் எனும் நிலையில், சித்திரையில் முத்திரை பதிக்கும் வண்ணமாக நடைபெறக்கூடிய மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாண வடிவமும் கள்ளழகர் வைகை ஆற்றல் எழுந்திரும் நிகழ்வு ஆகிய நடைபெற உள்ள நிலையில் தற்போது மாமதுரையில் மழை பெய்தது மதுரை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications