இரண்டு சுயநலவாதிகளுக்கு எதிராக என் பயணம்.. ராஜ கண்ணப்பன்
மதுரை: வாரிசு என்ற தகுதி அடிப்படையில் அதிமுகவில் சீட் வழங்கப்படுகிறது, அதிமுகவில் உள்ள இரண்டு சுயநலவாதிகளுக்கு எதிராக நான் பயணம் செய்கிறேன் என முன்னாள் அமைச்சர் இராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
மதுரையில் முன்னாள் அமைச்சர் இராஜ கண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
திமுக கூட்டணியை ஆதரித்து தமிழகம் முழுதும் பிரச்சாரம் செய்கிறேன். ஆரணி, சங்கரன்கோவில், தஞ்சாவூர் உள்ளிட்ட தொகுதிகளில் பிரச்சாரம், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன். அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தை வைத்து கொண்டு பாதகம் நடக்கிறது.

அதிமுகவில் முகம் தெரியாத நபர்களாக இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் உள்ளனர். மோடியின் பேச்சை கேட்டு இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் நடந்து வருகிறார்கள். திமுகவுக்கு தேர்தலில் ஆதரவு மட்டுமே. நிலைப்பாடு குறித்து தேர்தலுக்கு பின்னர் அறிவிப்பேன். ஒ.பி.எஸ் குடும்பதை காப்பற்ற மோடியுடன் கூட்டணி வைக்கப்பட்டது.
நான் எம்.பி சீட்டுக்காக அதிமுகவில் இருந்து விலகி வரவில்லை. சுயமரியாதை இல்லாததால் அதிமுகவில் இருந்து வெளியே வந்தேன். வாரிசு அடிப்படையில் அதிமுகவில் எம்.பி சீட் கொடுக்கப்பட்டது. வாரிசுகளுக்கு சீட் கொடுக்கவில்லை என்றால் அதிமுகவில் இருந்து வெளியே சென்று விடுவார்கள் என முதல்வர் என்னிடம் சொன்னார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வரவேற்கத்தக்கது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏழை எளிய மக்களுக்கு விடிவு காலமாக அமையும், பணமதிப்பு இழப்பால் தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. ராணுவ வீரர்கள் உயிரிழப்பு அரசியல் ஆக்கப்பட்டு உள்ளது. அதிமுக ஆளுமை இல்லாமல் உள்ளதால் ஆட்சியை மக்களால் கலையும். அதிமுகவில் பின்புலம் இல்லாததால் பல நிர்வாகிகள் அதிமுகவை எதிர்க்க முடியவில்லை.
அதிமுகவில் நியாயம் இல்லாத நிலை வந்த நேரத்தில் நான் பலமுறை அதிமுகவை எதிர்த்து உள்ளேன். கிருஷ்ணரை அவமதித்து பேசிய கி.வீரமணி பேச்சு கண்டனத்துக்கு உரியது. அதிமுகவில் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா பெயரை வைத்து தொண்டர்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். அதிமுகவில் நான் நீண்ட பயணம் செய்து உள்ளேன்.
அதிமுகவில் நடைபெறும் பிரச்சனைகளை நான் கேட்காமல் இருக்க முடியாது. ப.சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து நான் வழக்கு தொடர்ந்து இருந்தாலும் அவரின் மகனுக்கு நான் வாக்கு சேகரிக்கமால் இருக்க முடியாது. மே 23 ஆம் தேதி தமிழகத்தில் யாருக்கு ஆதரவு உள்ளது என தெரியவரும். எனக்கு தைரியம் உள்ளதால் அதிமுகவை எதிர்த்து வருகிறேன். எதிர்க்க தைரியம் இல்லாதவர்கள் அதிமுகவில் உள்ளனர்.
என் பயணம் அதிமுகவில் உள்ள இரண்டு சுயநலவாதிகளுக்கு எதிரானது. சுய நலத்துடன் எம்.பி சீட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மே 23 ஆம் தேதிக்கு பிறகு இ.பி.எஸ் - ஒ.பி.எஸ் வசம் இரட்டை இலை சின்னம் இருக்காது. அதிமுகவின் அடுத்த தலைவர் யார் என்பதை காலம் தான் பதில் சொல்லும். அதிமுக பாஜகவுக்கு அதிகமான எம்.பி இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளது" என தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications