காரை விற்கமாட்டேன்.. அடுத்த ஜல்லிக்கட்டிலும் பங்கேற்க மாட்டேன்.. 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்
மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பரிசாக கிடைத்த காரை விற்க மாட்டேன் என 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த இளைஞர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த போட்டியில் 739 காளைகள் களமிறங்கின. மொத்தம் 688 வீரர்கள் களத்தில் இருந்து காளைகளை அடக்க முயன்றனர்.
இதில் காளை தாக்கியதில் 36 பேர் காயமடைந்தனர். அது போல் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த ஒருவரும் மயக்கமடைந்து உயிரிழந்தார்.

மூன்றாவது பரிசு
இந்த நிலையில் மாலை 5 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்தன. அப்போது முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் அறிவிக்கப்பட்டன. இதில் மாறநாடு குளமங்கலம் காளை முதலிடம் பிடித்தது. இரண்டாம் இடம் புதுகை எஸ்ஐ அனுராதாவின் காளைக்கும் மூன்றாவது பரிசு ஜிஆர் கார்த்திக்கின் காளைக்கும் வழங்கப்பட்டது.

2 மற்றும் 3ஆவது இடம்
அது போல் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கிய ரஞ்சித் குமார் முதலிடம் பிடித்தார். 14 காளைகளை அடக்கி அழகர்கோவில் கார்த்திக் 2ஆவது இடமும், 13 காளைகளை அடக்கிய அரிடாப்பட்டி கணேசன் 3ஆவது இடத்தையும் பிடித்தனர்.

முதல்வர் பரிசு
இதில் முதலிடம் பிடித்த ரஞ்சித் குமாருக்கு ஒரு காரும், 4 கறவை மாடுகளும் பரிசாக வழங்கப்பட்டன. கார் பரிசை சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரஞ்சித்துக்கு வழங்கவுள்ளார். இதுகுறித்து ரஞ்சித் குமார் கூறுகையில், பரிசாக கிடைக்கும் காரை விற்க மாட்டேன்.

கார் விற்பனை
அது போல் அடுத்த ஜல்லிக்கட்டிலும் பங்கேற்க மாட்டேன் என கூறியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 15 காளைகளை அடக்கி ரஞ்சித்குமாரின் சகோதரர் ராம்குமார் முதலிடம் பிடித்து காரை பரிசாக பெற்றார். ஆனால் அவரது வீட்டில் காரை நிறுத்த இடமில்லாததால் அதை விற்பனை செய்து விட்டது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications