முருகன் மாநாடு வீடியோ.. எடப்பாடி பழனிசாமி நடவடிக்கையை மறந்துட்டீங்களா.. ஆர்பி உதயகுமார் வார்னிங்!
மதுரை: அண்ணா மற்றும் ஜெயலலிதா ஆகியோரை தவறாக பேசியதால், எடப்பாடி பழனிசாமி எடுத்த நடவடிக்கை அனைவருக்கும் தெரியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். முருகன் மாநாட்டில் அரசியல் இருக்காது என்ற நம்பிக்கையில் கலந்து கொண்டதாக கூறியுள்ள அவர், பெரியார், அண்ணா ஆகியோர் தொடர்பான வீடியோ ஒளிபரப்பான போது மேடைக்கு பின்புறமாக அமர்ந்திருந்ததாக கூறி இருக்கிறார்.
மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக நடத்தப்பட்ட முருகன் மாநாட்டில் பெரியார் மற்றும் அண்ணா ஆகியோர் குறித்து சர்ச்சையான வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அந்த மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பட்டா மற்றும் கடம்பூர் ராஜூ ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.

பாஜக வீடியோ
பெரியார், அண்ணா ஆகியோர் குறித்து சர்ச்சையான காணொளி ஒளிபரப்பப்பட்ட போதும், அமைதியாகவே அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு மேடையில் இருந்து வலதுபுறமாக இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அந்த இடத்தில் இருந்து மேடை நன்றாக தெரியும்படி இருந்தது. அதுமட்டுமல்லாமல் முருகன் மாநாட்டில் பங்கேற்ற விஐபி-க்களுக்கு பிரத்யேக பாதை உட்பட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அதிமுக பதில்
இதனைத் தொடர்ந்து பெரியார், அண்ணா ஆகியோர் குறித்து மோசமான வீடியோ ஒளிபரப்பாகிய போதும், அதிமுக நிர்வாகிகள் அமர்ந்திருந்தது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. திமுக மட்டுமல்லாமல் அதிமுக கட்சியினரே கொந்தளித்தனர். இதனைத் தொடர்ந்து முருகன் மாநாட்டில் கலந்து கொண்டது தொடர்பாக அதிமுக ஐடி விங் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆர்பி உதயகுமார் வீடியோ
இந்த நிலையில் முருகன் மாநாடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், முருகன் மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்களுக்கும், அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் என்ன நடைமுறைகளை கையாள்வார்கள் என்பதும் தெரியாது. இப்படியான ஒரு வீடியோவை ஒளிபரப்புவார்கள் என்பதும் தெரியாது.
வீடியோவை பார்க்கவில்லை
அந்த வீடியோ ஒளிபரப்பான போது நாங்கள் மேடைக்கு பின்புறமாக அமர்ந்திருந்தோம். அந்த வீடியோவை பார்க்க வாய்ப்பே இல்லை. அந்த வீடியோ ஒளிபரப்பிற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். முருகன் பக்தர்கள் அடிப்படையில் மேடை நாகரீகம் கருதி அமைதி காத்தோம். ஆனால் அண்ணாவுக்கு ஒரு இழுக்கு என்றால், அதனை எதிர்த்து அதிமுகவே முதலாவதாக குரல் கொடுக்கும்.
எடப்பாடி எடுத்த நடவடிக்கை
முருகன் மாநாட்டில் அரசியல் இருக்காது என்ற நம்பிக்கையில் தான் பங்கேற்றோம். அண்ணாவையும், ஜெயலலிதாவையும் அவதூறாக பேசியதற்காக எடப்பாடி பழனிசாமி எடுத்த நடவடிக்கை அனைவருக்கும் தெரியும். அதனால் திமுகவை போல் எதற்கும் சமாதானப்படுத்தி ஆட்சியை தக்க வைக்கும் கட்சியல்ல அதிமுக என்று தெரிவித்துள்ளார். தற்போது அதிமுக - பாஜக கூட்டணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கூட்டணி கடிவாளம் ஸ்டாலின் கையில்.. மாஸ் காட்டும் திமுக! அதிமுக கூட்டணியில் பாஜக டீம்! எடப்பாடி பாவம்! -
இந்தி திணிப்புக்கு தமிழிசை சௌந்தரராஜன் எதிர்ப்பு.. டெல்லிக்கு பறந்த கோரிக்கை! -
ஆர்எஸ்எஸ் டவுசர் அணியமாட்டார் முருகன்! மதுக்கூர் ராமலிங்கத்தின் பேச்சால் ஆடிப்போன பாஜக.. இது எப்போ? -
பரபர சூழலில் இன்று அதிமுக மா.செக்கள் கூட்டம்.. ராஜ்யசபா வேட்பாளரை தேர்வு செய்ய ஆலோசனை! -
இஸ்ரேலை நோக்கி.. செஜில் வகை ஏவுகணைகளை வீச தொடங்கியது ஈரான்! ரொம்ப கஷ்டம்! -
ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்ததற்காக கார் ஓட்ட மறுத்தாரா டிரைவர்? வைரல் வீடியோவிற்கு விளக்கம் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பற்றி ரோகிணிக்கு தெரிந்த உண்மை.. வீட்டை விட்டு போன மீனா! முத்து எடுத்த முடிவு -
உளவுத்துறையை விட மோசம்.. சங்கீதா, சஞ்சய் போட்ட போடு.. அப்படியே அடங்கிய விஜய்.. இப்படி வேற நடக்குதா? -
சிதம்பரம் மூலம் ஸ்டாலினுக்கு ராகுல் அனுப்பிய மெசேஜ்.. சிக்கலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி -
திமுக ஆதரவாளர்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்ற ராகுல் முடிவு? புதிய தலை யார்? -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் கேம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ அப்டேட்.. நோட் பண்ணுங்க -
"எவ்வளவு செலவானாலும் ஓகே.." கோடிகளை கொட்டும் அல்ட்ரா செல்வந்தர்கள்! இதுதான் துபாய் எஸ்கேப் பிளான்












Click it and Unblock the Notifications