முருகன் மாநாடு வீடியோ.. எடப்பாடி பழனிசாமி நடவடிக்கையை மறந்துட்டீங்களா.. ஆர்பி உதயகுமார் வார்னிங்!
மதுரை: அண்ணா மற்றும் ஜெயலலிதா ஆகியோரை தவறாக பேசியதால், எடப்பாடி பழனிசாமி எடுத்த நடவடிக்கை அனைவருக்கும் தெரியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். முருகன் மாநாட்டில் அரசியல் இருக்காது என்ற நம்பிக்கையில் கலந்து கொண்டதாக கூறியுள்ள அவர், பெரியார், அண்ணா ஆகியோர் தொடர்பான வீடியோ ஒளிபரப்பான போது மேடைக்கு பின்புறமாக அமர்ந்திருந்ததாக கூறி இருக்கிறார்.
மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக நடத்தப்பட்ட முருகன் மாநாட்டில் பெரியார் மற்றும் அண்ணா ஆகியோர் குறித்து சர்ச்சையான வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அந்த மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பட்டா மற்றும் கடம்பூர் ராஜூ ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.

பாஜக வீடியோ
பெரியார், அண்ணா ஆகியோர் குறித்து சர்ச்சையான காணொளி ஒளிபரப்பப்பட்ட போதும், அமைதியாகவே அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு மேடையில் இருந்து வலதுபுறமாக இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அந்த இடத்தில் இருந்து மேடை நன்றாக தெரியும்படி இருந்தது. அதுமட்டுமல்லாமல் முருகன் மாநாட்டில் பங்கேற்ற விஐபி-க்களுக்கு பிரத்யேக பாதை உட்பட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அதிமுக பதில்
இதனைத் தொடர்ந்து பெரியார், அண்ணா ஆகியோர் குறித்து மோசமான வீடியோ ஒளிபரப்பாகிய போதும், அதிமுக நிர்வாகிகள் அமர்ந்திருந்தது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. திமுக மட்டுமல்லாமல் அதிமுக கட்சியினரே கொந்தளித்தனர். இதனைத் தொடர்ந்து முருகன் மாநாட்டில் கலந்து கொண்டது தொடர்பாக அதிமுக ஐடி விங் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆர்பி உதயகுமார் வீடியோ
இந்த நிலையில் முருகன் மாநாடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், முருகன் மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்களுக்கும், அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் என்ன நடைமுறைகளை கையாள்வார்கள் என்பதும் தெரியாது. இப்படியான ஒரு வீடியோவை ஒளிபரப்புவார்கள் என்பதும் தெரியாது.
வீடியோவை பார்க்கவில்லை
அந்த வீடியோ ஒளிபரப்பான போது நாங்கள் மேடைக்கு பின்புறமாக அமர்ந்திருந்தோம். அந்த வீடியோவை பார்க்க வாய்ப்பே இல்லை. அந்த வீடியோ ஒளிபரப்பிற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். முருகன் பக்தர்கள் அடிப்படையில் மேடை நாகரீகம் கருதி அமைதி காத்தோம். ஆனால் அண்ணாவுக்கு ஒரு இழுக்கு என்றால், அதனை எதிர்த்து அதிமுகவே முதலாவதாக குரல் கொடுக்கும்.
எடப்பாடி எடுத்த நடவடிக்கை
முருகன் மாநாட்டில் அரசியல் இருக்காது என்ற நம்பிக்கையில் தான் பங்கேற்றோம். அண்ணாவையும், ஜெயலலிதாவையும் அவதூறாக பேசியதற்காக எடப்பாடி பழனிசாமி எடுத்த நடவடிக்கை அனைவருக்கும் தெரியும். அதனால் திமுகவை போல் எதற்கும் சமாதானப்படுத்தி ஆட்சியை தக்க வைக்கும் கட்சியல்ல அதிமுக என்று தெரிவித்துள்ளார். தற்போது அதிமுக - பாஜக கூட்டணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications