நடு ரோட்டில் திடீர் பள்ளம்.. விரிசல் பெரிதாகி வருவதால் மக்கள் பீதி.. மதுரையில் பரபரப்பு
Recommended Video
மதுரை: மதுரை மேல அனுப்பானடி ரயில்வே கேட் பகுதியில் சாலையின் நடுவே தீடீரென மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது.
மணல் அரிப்பின் காரணமாக அப்பள்ளம் ஏற்பட்டுள்ளது.அதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பள்ளம் விரிசலோடு பெரிதாகி கொண்டே இருக்கிறது.

சுமார் 12 அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்ததால் மேல அனுப்பானடி பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். பள்ளம் ஏற்பட்ட ஒரு மணிநேரம் முன்பு மாநகராட்சி ஊழியர்கள் நேரடியாக அந்த பகுதிக்கு வந்து பள்ளத்தை சரிப்படுத்தும் வேலையை செய்து வந்தனர்.

மேலும் பள்ளத்தில் உள்ள கழிவுநீர் தேங்கி இருப்பதால் கழிவு நீரை முற்றிலுமாக அகற்றி விட்ட பின்பு தான் அந்த பள்ளத்தை மூட முடியும் என்றும் தெரிவித்தனர்.

மண்ணரிப்பின் காரணமாக தான் இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது என்று சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அலுவலர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். 12 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் குழந்தைகள் யாரும் உள்ளே விழுந்து விபத்து ஆகாத வண்ணம் பள்ளத்தின் அருகே காவல்துறையினர் நின்று வாகனங்களை வேறு வழியில் செல்ல அறிவுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications