மதுரை அருகே வீட்டை சுற்றி தோண்ட தோண்ட தங்கம்.. போலீசுக்கே ட்விஸ்ட் தந்த கொள்ளைக்கார குடும்பம்
மதுரை: மதுரை அருகே பல வீடுகளை கொள்ளை அடித்து, வீட்டை சுற்றி 180 சவரன் நகைகளை புதைத்து வைத்த கொள்ளைக்கார குடும்பத்தை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அந்த குடும்பத்தினர் குறித்து போலீஸார் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், சிலைமான், கருப்பாயூரணி உள்ளிட்ட திருமங்கலத்தை சுற்றிய பகுதிகளில் கடந்த 2021ம் ஆண்டு முதல் பூட்டிய வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. இரவு நேரங்களில் வீடு புகுந்து கொள்ளை அடிக்கும் கும்பல், அங்கிருக்கும் பணம், நகைகளை எடுத்து சென்றுவிடுகிறார்கள். அப்படி 20க்கும்மேற்பட்ட வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. அதுவும் எப்படி என்றால் எல்லா குற்றச்சம்பவங்களிலும் தடயங்கள் ஒரே மாதிரி இருந்துள்ளது. இதனால் கொள்ளை சம்பவங்கள் ஒரே கும்பலே நிகழ்த்தி இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாந்த் தனிப்படை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஊமச்சிகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன், சிலைமான் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், குமரகுரு உள்ளிட்டோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் கொள்ளை நடந்த வீடுகளை சுற்றி அனைத்து பகுதிகளிலும் நேரில் சென்று, கொள்ளையர்களை பற்றி மறைமுகமாக விசாரித்தனர். கொள்ளை கும்பல் குறித்து ஏதாவது துப்புக்கிடைத்துவிடாதா என்று தேடிய டிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையிலான போலீசாருக்கு ஒரு விஷயம் பொறி தட்டியது. கொள்ளை நடந்த இடத்தில் ஒரு வயதான பெண் வந்ததும், அவர்களுடன் 3 இளைஞர்கள் அப்பாவி போல் சுற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த கும்பல் புதன்கிழமை அன்று கல்மேடு பகுதி வழியாக பயணித்ததும். மீண்டும் கொள்ளையில் ஈடுபட போவதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து கல்மேடுபகுதயில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தார்கள். சோதனையில் இரு இளைஞர்கள் வாகனத்தில் ஆயுதங்கள் மற்றும் கையுறை ஆகியவற்றை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
காவல்துறையினர் ஓரளவு இவர்கள் தான் குற்றவாளி என்பதை உறுதி செய்தநிலையில், கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் கொள்ளை கும்பல் இவர்கள் தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒருவர் மதுரை மாவட்டம் இளமானூர்புதுரைச் சேர்ந்த சின்னச்சாமி(வயது 25) என்ற நரி என்பதும், மற்றொருவர் அவரது சகோதரர் சேனைச்சாமி (23) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரும் அண்ணன் பெரிய கருப்பசாமி (27), பெரியம்மா ஆசை பொண்ணு (65) ஆகியோர் குடும்பமாக சேர்ந்து கடந்த 3 வருடங்களாக பூட்டிய வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சோனைச்சாமி(23), இவர்களது பெரியம்மா ஆசைபொண்ணு (65), இவரது மகன் பெரிய கருப்பசாமி (27) ஆகியோர் என தெரியவந்தது.
நான்கு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களுடைய வீடுகளுக்கு சென்று நகைளை பறிமுதல் செய்ய முயன்றனர்,.ஆனால் நகைகள் இல்லை. ஆனால் போலீசார் அதிரடியாக விசாரித்த பின்னர், நகைகளை வீட்டை சுற்றி புதைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை மண்வெட்டியால் வெட்டி எடுத்து 180 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் 9 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். மொத்தம் 240 சவரன் நகைகளை அந்த கும்பல் கொள்ளையடித்ததும், கொள்ளையடித்த பணம் நகைகளை பயன்படுத்தி வீடு மற்றும் வாகனங்கள் வாங்கியதும் தெரியவந்துள்ளது. அவர்களின் வீடு மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications