"சேட்டை பண்ணுனா சுடத்தான் செய்வாங்க”.. போலீசாருக்கு பாராட்டு பத்திரம் வாசித்த வரிச்சியூர் செல்வம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தற்போது திருந்தி வாழ்வதாக கூறி வரும் ரௌடி வரிச்சியூர் செல்வம் இன்று போலீசாருக்கு பாராட்டு பத்திரம் வாசித்துள்ளார். வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க கோவை போலீசார் தீவிரம் காட்டி வருவதாகத் தகவல்கள் பரவி வந்த நிலையில், அது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார் வரிச்சியூர் செல்வம்.

மதுரையை சேர்ந்த ரவுடி வரிச்சியூர் செல்வம், கோவைக்கு ஒரு கட்டப் பஞ்சாயத்துக்காக பயங்கர ஆயுதங்களுடன் வந்ததால் அவரை சுட்டுப் பிடிக்க கோவை போலீசார் உத்தரவிட்டதாக வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மதுரையில் உள்ள தனது இல்லத்தில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Rowdy Varichiyur Selvam Praises Police Amid Arrest Rumors Addresses Media

அப்போது அவர் கூறுகையில், "என்னை சுட்டுப் பிடிக்க கோவை போலீசார் உத்தரவிட்டுள்ளதாக பரவி வரும் செய்தி எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது. என்ன காரணம் என்றே தெரியவில்லை. நான் கோவை பக்கம் சென்றே 13 வருடங்கள் ஆகிறது. காவல்துறைக்கு கட்டுப்பட்டு நல்ல பிள்ளையாக வாழ்ந்து வருகிறேன். நான் எங்கே சென்றாலும் காவலர்களுக்கு, அதுகுறித்த தகவலை வாட்ஸ் அப்பில் அனுப்பி வருகிறேன். என்னை முழுவதுமாக காவல் துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

இப்போது நான் எந்த பிரச்சனைக்கும் போவது இல்லை. பேரன் பேத்திகளுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறேன். இப்போது உள்ள காவல்துறை தவறு செய்தால் விடுவது கிடையாது. தப்பு செய்தவர்களை விரட்டி சென்று பிடித்து காலை உடைப்பார்கள், காலில் சுடுவார்கள் இல்லையென்றால் சுட்டுவிடுவார்கள். சேட்டை செய்தால் போலீசார் சுட தான் செய்வார்கள். திருந்தினால் விட்டுவிடுவார்கள். நல்லவர்களை சுட்டால் கேள்வி கேட்கலாம். போலீஸ் சுடுவது எல்லாம் ரவுடி, திருடர்களைத்தான்.

மனிதர்களாய் இருக்கும் வரை நடவடிக்கை தேவை இல்லை. ஆனால் மிருகமாகிவிட்டால் அப்போது தண்டித்து தானே ஆக வேண்டும். தற்போது உள்ள ரவுடிகள் மனிதர்களாக இல்லை, மிருகங்கள் போல இருப்பதனால் தான் காவல்துறையினர் அவர்களை என்கவுண்டர் செய்கிறார்கள். கால் கையை உடைக்கிறார்கள். காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமிற்காக கையில் அரிவாள் வைத்து சுத்துவது, வாளால் கேக் வெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அது போலீசுக்கு தெரிந்தால் கை கால்கள் உடைக்கப்படும். என் குடும்பம் பேரன், பேத்திகள் என தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். எனக்கு எதிரிகள் என்று யாருமே கிடையாது.

என் மீது பழைய வழக்குகள் மட்டுமே உள்ளன. நான் எந்த பிரச்சனைக்கும் செல்வது இல்லை. என் மீது ஒன்றும் காவல்துறை செய்யாத குற்றத்திற்கு வழக்கு போடவில்லை. செய்த தவறுக்கு தான் வழக்கு போட்டுள்ளார்கள். அதில் விசாரணை நடந்து வருகிறது. நீதிமன்றம் முடிவு செய்யும்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+