"சேட்டை பண்ணுனா சுடத்தான் செய்வாங்க”.. போலீசாருக்கு பாராட்டு பத்திரம் வாசித்த வரிச்சியூர் செல்வம்!
சென்னை: தற்போது திருந்தி வாழ்வதாக கூறி வரும் ரௌடி வரிச்சியூர் செல்வம் இன்று போலீசாருக்கு பாராட்டு பத்திரம் வாசித்துள்ளார். வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க கோவை போலீசார் தீவிரம் காட்டி வருவதாகத் தகவல்கள் பரவி வந்த நிலையில், அது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார் வரிச்சியூர் செல்வம்.
மதுரையை சேர்ந்த ரவுடி வரிச்சியூர் செல்வம், கோவைக்கு ஒரு கட்டப் பஞ்சாயத்துக்காக பயங்கர ஆயுதங்களுடன் வந்ததால் அவரை சுட்டுப் பிடிக்க கோவை போலீசார் உத்தரவிட்டதாக வந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, மதுரையில் உள்ள தனது இல்லத்தில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "என்னை சுட்டுப் பிடிக்க கோவை போலீசார் உத்தரவிட்டுள்ளதாக பரவி வரும் செய்தி எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது. என்ன காரணம் என்றே தெரியவில்லை. நான் கோவை பக்கம் சென்றே 13 வருடங்கள் ஆகிறது. காவல்துறைக்கு கட்டுப்பட்டு நல்ல பிள்ளையாக வாழ்ந்து வருகிறேன். நான் எங்கே சென்றாலும் காவலர்களுக்கு, அதுகுறித்த தகவலை வாட்ஸ் அப்பில் அனுப்பி வருகிறேன். என்னை முழுவதுமாக காவல் துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
இப்போது நான் எந்த பிரச்சனைக்கும் போவது இல்லை. பேரன் பேத்திகளுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறேன். இப்போது உள்ள காவல்துறை தவறு செய்தால் விடுவது கிடையாது. தப்பு செய்தவர்களை விரட்டி சென்று பிடித்து காலை உடைப்பார்கள், காலில் சுடுவார்கள் இல்லையென்றால் சுட்டுவிடுவார்கள். சேட்டை செய்தால் போலீசார் சுட தான் செய்வார்கள். திருந்தினால் விட்டுவிடுவார்கள். நல்லவர்களை சுட்டால் கேள்வி கேட்கலாம். போலீஸ் சுடுவது எல்லாம் ரவுடி, திருடர்களைத்தான்.
மனிதர்களாய் இருக்கும் வரை நடவடிக்கை தேவை இல்லை. ஆனால் மிருகமாகிவிட்டால் அப்போது தண்டித்து தானே ஆக வேண்டும். தற்போது உள்ள ரவுடிகள் மனிதர்களாக இல்லை, மிருகங்கள் போல இருப்பதனால் தான் காவல்துறையினர் அவர்களை என்கவுண்டர் செய்கிறார்கள். கால் கையை உடைக்கிறார்கள். காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமிற்காக கையில் அரிவாள் வைத்து சுத்துவது, வாளால் கேக் வெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அது போலீசுக்கு தெரிந்தால் கை கால்கள் உடைக்கப்படும். என் குடும்பம் பேரன், பேத்திகள் என தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். எனக்கு எதிரிகள் என்று யாருமே கிடையாது.
என் மீது பழைய வழக்குகள் மட்டுமே உள்ளன. நான் எந்த பிரச்சனைக்கும் செல்வது இல்லை. என் மீது ஒன்றும் காவல்துறை செய்யாத குற்றத்திற்கு வழக்கு போடவில்லை. செய்த தவறுக்கு தான் வழக்கு போட்டுள்ளார்கள். அதில் விசாரணை நடந்து வருகிறது. நீதிமன்றம் முடிவு செய்யும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications