திருமங்கலத்தில் ரூ.30 லட்சம் பரிசுப்பொருட்கள் பறிமுதல்... அமைச்சர் ஆர் பி. உதயகுமார் விளக்கம்!
மதுரை: திருமங்கலத்தில் கப்பலூர் சிட்கோ சங்க நிர்வாக கட்டிடத்தில் சுமார் ரூ.30 லட்சம் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தேர்தலுக்கு முன்பாக அதிமுக தொழில்நுட்ப பிரிவை சார்ந்த இளைஞர்கள், இளம் பெண்கள் ஆகியோருக்குகொடுப்பதற்காக வைத்திருந்த பரிசுப் பொருட்கள் என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் விளக்கம் அளித்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சிட்கோ சங்க நிர்வாக கட்டிடம் உள்ளது. அந்த கட்டடத்துக்குள் ஏராளமான வாளிகள், கம்ப்யூட்டர் உள்ளிட்டபல பரிசுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து அதிகாரிகள் அங்கு சென்றபோது வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஸ்டிக்கரும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டிக்கரும் ஒட்டப்பட்ட வாளிகள் இருந்ததும், இதேபோல் அட்டை பெட்டியில் இருந்த எண்ணற்ற பொருட்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் ரூ.30 லட்சம் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக பரிசு பொருட்கள் வைத்திருந்த அறையை திறக்கும்படி அமமுக , திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரிசு பொருட்கள் குறித்து விளக்கம் அளித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், '' தேர்தல் அறிவிப்பிற்கு முன் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சார்ந்த இளைஞர்கள், இளம் பெண்கள் ஆகியோருக்குகொடுப்பதற்காக வைத்திருந்த கணினி மற்றும் ஆடைகள் போன்ற பரிசுப் பொருட்கள் அம்மா கோவில் திறப்பு விழாவிற்கு வருகைதந்த பொதுமக்களுக்கும் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கும் வழங்குவதற்காக வைத்திருந்தது.

தேர்தல் நன்னடத்தை விதிமுறையின் காரணமாக பரிசுப் பொருட்களை குடோன் ஒன்றில் பாதுகாப்பாக வைத்திருந்தோம்" என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications