சாத்தான்குளம் வழக்கு.. சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், ராஜாஜி மருத்துவமனையில் திடீரென அனுமதி
மதுரை : சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் சிறையில் உள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் முதுகு வலி காரணமாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு முதுகு தண்டுவடத்தில் வலி இருப்பதாக டாக்டரிடம் கூறியதாக கூறப்படுகிறது. ஆகையால் அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று டாக்டர் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதுகாப்புடன் இன்று பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அதில் பணியாற்றும் இரண்டு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அவர்கள் மதுரையில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications